குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவரே, பலிபீடத் துணிகளையும் அணிகளையும் உருவாக்க உம் ஊழியர் மோசேக்குக் கற்றுத் தந்தீர். மிரியம் அவற்றை நெய்து, உடன்படிக்கைக் கூடாரத்தின் பணிக்கு ஏற்றவாறு அமைத்தார். இறைவா, எங்கள் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்து, மகிமை மிகுந்த உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசுகிறிஸ்துவின் திருப்பீடத்தில் விரித்து அலங்கரிப்பதற்கான இத்துணிகளை (இத்துணியை) ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு அவற்றின்மீது தீர்த்தம் தெளிக்கிறார்:)