அடிப்படை ஞானோபதேசம்

01  ஞானோபதேசமும் அதன் பயனும்!

02 அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம்!

03  சர்வேசுரன் (கடவுள்) இருக்கிறாரா?

04 கடவுளும், அவரது சுபாவமும், சாராம்சமும், இலட்சணங்களும்!

05 அரூபி என்ற முறையில் கடவுளின் சுபாவம் (சர்வேசுரன்  சரீரமில்லாமலிருக்கிறார்)

06 அனைத்தையும் காண்பவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், சர்வ வல்லபரும், பரிபூரண ஞானமுள்ள சர்வேசுரன்

07 தேவ பராமரிப்பும், தீமையின் பிரச்சினையும்

08 கடவுளின் நன்மைத்தனம், இரக்கம், பொறுமை, நீதி

09 பரிசுத்த தமத்திரித்துவம்

10 பிதாவினுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே

11 உலக சிருஷ்டிப்பு

12 நல்ல சம்மனசுக்களும் கெட்ட சம்மனசுக்களும்!

13 சம்மனசுக்களின் இயல்பு!

14 சம்மனசுக்களின் படைப்பு!

15 நவவிலாச சம்மனசுக்கள்!

16 பரிசுத்த வேதாகமத்தில் சம்மனசுக்கள்!

17 காவல் சம்மனசுக்கள்!

18 வேதசாட்சிகளின் சம்மனசுக்கள்!

19 புனிதர்களும் சம்மனசுக்களும்!

20 மூன்று பெரும் இளவரசர்கள்!

21 சம்மனசுக்களும் திருப்பலி பூசையும்!

22 பசாசுக்கள் (துஷ்ட அரூபிகள்)

23 பேய் (சாத்தான்) உண்டா? இல்லையா?

24 பேயா? நோயா?

25 பேயுண்மையைப் பற்றிய திருச்சபை மற்றும் பாரம்பரியத்தின் போதனைகள்

26 பேயின் இயல்பு

நமது Catholic Tamil தளங்கள்

   
   

நமது Catholic Tamil தளங்கள் உங்களின் மேலான பயன்பாட்டிற்கு...

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! எங்களுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தும் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களின் ஆசீரோடும், எங்களோடு உடனிருந்து எங்கள் அட்மின்கள் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபித்து எங்களோடு துணைநிற்கும் அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களோடும் நமது புதிய தளங்களை வெளியிட்டு அனைத்தையும் இலவசமாகவே கத்தோலிக்க விசுவாசிகளிடம் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் சிறப்பு ஆசீரோடு பின்வரும் தளங்களை வெளியிட்டுள்ளோம். பயன்பெற அன்போடு வேண்டுகிறோம்.

முதன்மை இணையதளம்: https://www.catholictamil.com/

வேதாகமம் இணையதளம்: http://bible.catholictamil.com/ 

கூகிள் பிளே ஸ்டோர்: https://play.google.com/store/apps/developer?id=Catholic+Tamil

புத்தக அப்ளிகேஷன்: https://play.google.com/store/apps/details?id=com.catholic_books.books

தமிழ் வானொலி அப்ளிகேஷன்: https://play.google.com/store/apps/details?id=com.catholictamil.radio

தெலுங்கு வானொலி அப்ளிகேஷன்: https://play.google.com/store/apps/details?id=com.catholictamil.teluguradio

வேதாகமம் அப்ளிகேஷன்https://play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible

வேதாகமம் exe for Computers/ Laptopshttp://bible.catholictamil.com/app/Bible.zip

தமிழ் வானொலி இணையதளம்https://www.radio.catholictamil.com/

தெலுங்கு வானொலி இணையதளம்https://www.telugu.catholictamil.com/

ஆலயம் அறிவோம் இணையதளம்: https://www.church.catholictamil.com/

யூடியூப் சேனல்: https://youtube.com/c/CatholicTamil

முகநூல் பக்கம்: https://www.facebook.com/traditionalcatholictamil/

டிவிட்டர்: https://twitter.com/CatholicTamil1?t=ZFVR8FDBJzNLhU5W70dk2w&s=09

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/invites/contact/?i=1eykhdaxrsty0&utm_content=o0akex9

டெலிக்கிராம்: https://t.me/TraditionalCatholicTamil

தொடர்புக்கு: https://wa.me/+919894398144

Kilachery Parish இணையதளம்: https://www.kilacheryparish.com/


    

ஓரு ஜெப விண்ணப்பம்!

இந்த இக்கட்டான நேரத்தில் செய்யப்படும் ஈடில்லா சேவைகளுக்கு நன்றி சொல்வோம்.. அவர்களுக்காக அதிகமாக ஜெபிப்போம்…

1. மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டை கவனிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், மெடிக்கலில் வேலை செய்வோர், இறந்தவர்களை உரிய இடத்தில் சேர்ப்போம் இன்னும் யாராவது விடப்பட்டிருந்தால் அவர்களுக்காகவும்,

2. காவல் துறையில் பணி புரியும் அனைத்து துறைக் காவலர்கள்..

3. சுகாதார மையத்தில் பணி புரியும் மேல் மட்ட அதிகாரிகள் முதல் கடைக்கோடி ஊழியர்கள் வரை

4. அரசுத்துறையினர் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் முதல் கடைக் கோடி அரசாங்க ஊழியர்கள் வரை..

5. செய்தித் துறையில் பணி செய்யும் அத்தனை மீடியாக்காரர்கள் குறிப்பாக ஸ்பாட்டில் இருப்பவர்கள்..

6. இந்த நேரத்திலும் மக்களுக்கு பால், மளிகை, காய்கறி, உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோருக்காகவும்,

7. உணவின்றி தவிக்கும் அன்றாட கூலி தொழிலாளர்களைத் தேடிச் சென்று உணவு வழங்குவோர்களுக்காகவும்,

8. ஆங்காங்கே ஊர் போய் சேர முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் குறிப்பாக வட இந்திய தொழிலாளர்களுக்கு போக்குவரத்து ஏற்படுத்திக்கொடுக்கும் அரசு துறையினர் மற்றும் தனியார் துறையினருக்கு,

9. தாராளமாக நிதி வழங்கும் தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காகவும்

10. இதில் இல்லாமல் பல வேறு உதவிகளைச் செய்பவர்களுக்கும், இதில் விடுபட்டவர்களுக்கும்

நெஞ்சார்ந்த நன்றி சொல்வோம்; அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.. நாம் அவர்களுக்காக அதிகமாக ஜெபிப்போம். அவர்களுக்காக கடவுளின் உதவியைக் நாடுவோம். நம் ஜெபமாலையில் ஒரு பத்துமணிகளாவது ஒப்புக்கொடுப்போம்.  

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களின் சூழ்நிலையை ஒப்புக்கொடுத்து அவர்கள் சீக்கிரம் குணம் பெற் அதிகமாக ஜெபிப்போம்.. மேலும் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஜெபிப்போம்.. உலகனைத்திலும் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் ஜெபிப்போம்..

விரைவில் கடவுளின் கோபம் தணிந்து இரக்கம் பிறக்கவும் உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஆன்ம சரீர நன்மைகள் கிடைக்க தொடர்ந்து ஜெபிப்போம்.. குறிப்பாக நம்  நற்கருணை ஆண்டவரிடமும், நம் தாய் மரியிடம் ஜெபமாலையின் மூலமாகவும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

திருவழிபாட்டு பாடல் குழுவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

“ஒரு முறை பாடுதல்  நான்கு முறை ஜெபிப்பதற்கு சமம்” உங்கள் பணி மகத்தான பணி.. உங்கள் இசையும் பாடலும் பரலோக யாழிசைக்கு சமம். நீங்கள் ஒவ்வொரு திருப்பலியிலும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்பது நிதர்சமான உண்மை..

இப்போது ஒரு சில வேண்டுகோள்கள்..

1. முக்கியமான பாடல்களில் அதுவும் திருப்பலிக்கு வந்திருக்கும் அனைத்து மக்களும் ஆர்வத்தோடு பாடும் பாடல்களின் மெட்டுக்களை தயவு செய்து மாற்றாதீர்கள்.. அப்போது என்ன நடக்கிறது? உங்களுடைய புதிய ராகம் அவர்களுக்குத் தெரியாததால் உங்களைத் தவிர இறைமக்கள் யாரும் பாடுவதில்லை.. உங்களால் அவர்கள் பாடுவது தடைசெய்யப்படுகிறது.. குறிப்பாக “ஆண்டவரே இரக்கமாயிரும், உன்னதங்களிலே, பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, தூயவர் கீதம் போன்ற பாடல்கள். ஆசீர்வாதத்தில் “மான்புயர் கீதம்". நித்திய ஸ்திக்குரிய பாடல்கள். இன்னும் பல ஆலயங்களில் பழைய வானவர் கீதம், விசுவாசப்பிரமாணம் பாடப்படுகின்றது. 

2. வருகைப்பாடல், பதிலுரைப்பாடல், காணிக்கைப்பாடல், திருவிருந்துப்பாடல், நன்றிப்பாடல் அதிலெல்லாம் பின்னியெடுங்கள் உங்களை யார் கேட்கிறது.. சரிகமபதனிச எல்லாம் சேருங்கள்.. ஆனால் எல்லாரும் பாடும் வழிபாட்டுப்பொது பாடல்களிலும் சரிகமபதனிச- வை சேர்த்த்தால் நாங்கள் எப்படிப்பாடுவது.. கண்டிப்பாக நாங்கள் உங்கள் அளவுக்கு திறமைசாலிகள் அல்ல..

3. கீபோர்ட் இசைப்போரின் கரங்கள் சும்மாவே இருக்காது. குருவானவர் “இவர் வழியாக… இவரோடு.. இவரில் பாடும்போது  அப்போதான் பின்னனி இசைகொடுப்பார்.. இது மிகவும் தவறானது.. ஆண்டவருக்கு செய்யும் அவசங்கை.. இது திருப்பலி ஒழுங்கிற்கு எதிரானது. மேலும் மக்கள் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருக்கும்போது இசைக்கருவியை சரி செய்வார்.. அது ஜெபமாலையின் இடையே மக்களின் கவனத்தை திசை திருப்பி விநோத இசையை எழுப்புவார்.. 

4. இப்போது நிறைய ஆலயங்களில் “இவர் வழியாக.. இவரோடு..இவரில்" குருக்களோடு மக்களும் சேர்ந்து பாடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. சில இடங்களில் குருக்களே மக்களை பாடுமாறு சொல்கிறார்கள்.. இதுவும் திருப்பலி ஒழுங்குமுறைக்கு எதிரானது..

5. இறுதியாக ஒரே ஒரு வேண்டுகோள் நம் பழைய பாரம்பரிய பாடல்களை முற்றிலும் ஒதுக்கிவிடாதீர்கள்.. அவற்றில் ஒன்றிரண்டு பாடல்களையாவது சேர்த்து திருப்பலியில் பாடுங்கள்..

6. ஒரு நினைவூட்டல் ஒரு சில பாடல்கள் “வரம் கேட்டு வருகின்றேன் இறைவா”, “  நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ, தெய்வீக அன்பால்தானோ”, பலி பீடத்தில் வைத்தேன் என்னை, மனம் தரும் மலரில், செம்மரியின் விருந்துக்கு, மாதாவே துணை நீரே உம்மை, மாதாவே சரணம், இயேசுவே என்னிடம் நீ பேசு, உம் திருயாழில், சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, யாரிடம் செல்வோம் இறைவா, அன்பின் தேவ நற்கருணையிலே, நற்கருணை நாதரே… இன்னும் நீங்கள் யோசித்துப்பார்க்கும் பாடல்கள்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

எப்படி இருந்த நாம் இப்படி ஆகிட்டோம்!

முன்பெல்லாம் சனிக்கிழமை மாலையில் நாம் ஆலயத்தில் இருப்போம்.. மாலை ஜெபமாலைக்குப்பின் பங்குத்தந்தையின் பாவசங்கீர்த்தனத் தொட்டியைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.. அவர் சரியாக ஜெபமாலை முடியவும் ஆலயத்தின் பின்பகுதிக்கு வந்து சிறிது நேரம் முழங்காலில் நின்று ஜெபித்துவிட்டு.. பாவசங்கீர்த்தனத்தொட்டியில் அமர்வார்.. ஒரு புறம் பெண்கள், மறு புறம் ஆண்கள் என்று முழங்காலில் நிற்க நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய ஆர்வமோடு முன்டியடித்துக் கொண்டு ஆயத்தமாகுவோம்.. பாவசங்கீர்த்தனம் செய்த பின்புதான் வீடு செல்வோம்  நண்பர்களோடு பேசிக்கொண்டு..

மறு நாள் திருப்பலிக்கு வெறும் வயிரோடு செல்வோம்.. திவ்ய திருவிருந்து நேரத்தில் நாமே சென்று பீடத்தின் முன்புறம் இருக்கும் கிராதி முன்பு முழங்காலில் இருந்து பக்தியோடு ஆண்டவரை  நாவில் வாங்கிக்கொண்டு எவ்வித பராக்குகளுக்கும் இடங்கொடுக்காமல் நாம் இருந்த இடம் வந்து முழங்காலில் நின்று சிறிது நேரம் ஜெபிப்போம்.. ஜெபித்துவிட்டு அமர்வோம்.. அமர்ந்ததும் பங்குத்தந்தை ஜெபிக்க ஆரம்பிப்பார்..

எப்படி என்றால், “ சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இப்போது நம்மிடம் வந்திருக்கும் இயேசு ஆண்டரிடம் அமைதியாக ஜெபிப்போம்.. என்று சொல்லிவிட்டு அவர் மவுனமாக ஜெபிப்பார்.. நாமும் நம் உள்ளத்தில் வந்த ஆண்டவரிடம் அமைதியாக ஜெபிப்போம்.. அதன் பின்புதான் “நன்றி கூறி மன்றாடுவோமாக.. ஜெபத்தை குருவானவர் ஜெபிப்பார்…

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை.. நாம் செய்த பாவசங்கீர்த்தனம் எங்கே?

முழங்காலில் நின்று நாவில் மட்டும் திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கிய பழக்கம் எங்கே ?

திவ்ய நற்கருணை வாங்கிய பின்பு ஆண்டரோடு மவுனமாக செலவழித்த 10 நிமிடங்கள் எங்கே?

ஓரு மூன்று மணி நேரமாவது ஆண்டவரை வாங்கும் முன் வெறும் வயிரோடு இருந்த பழக்கம் எங்கே?

திவ்ய நற்கருணை பேழையை கடந்த போதெல்லாம் ஒரு கால் முட்டி போட்ட பழக்கம் எங்கே?

ஆண்டவரை தாழ்ந்து பணிந்து ஆராதித்த பழக்கம் எங்கே?

இப்படியிருந்த நாம் எப்படி மாறிப்போனோம்..?

நின்று கொண்டு வாங்க ஆரம்பித்தோம்..

அப்புறம் நொட்டாங்கையில் (இடது கையில்) வாங்க ஆரம்பித்தோம்?

இப்போது நாமே துணிச்சலோடு திவ்ய நற்கருணை பாத்திரத்தில் கையை விட்டு  நம் அர்ச்சிக்கப்படாத கரங்களால் ஆண்டவரை தொட்டு, திவ்ய திரு இரத்தப்பாத்திரத்தில் நம் கையை விட்டு ஆண்டவருடைய திவ்ய திருஇரத்தத்தில் தோய்த்து நாம் ஆண்டவரை உட்கொள்ளும் அளவுக்கு நமக்கு துணிச்சலும், அகங்காரமும் பெருகிவிட்டதே அது எப்படி?

வர.. வர.. விசுவாசம் வளர வேண்டுமா? அல்லது தேய வேண்டுமா?

இதைத்தான் ‘கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை ‘ என்பார்கள்..

தயாரிப்பு இல்லாமல் ஆண்டவரை வாங்கும் பழக்கம் எப்படி வந்தது..?

சனிக்கிழமை இரவு தூங்கும் வரை டி.வி பார்த்துவிட்டு அப்படியே தூங்கி முழித்து ‘ ஆ! இன்று ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போக வேண்டுமே ! என்ற எண்ணத்தில் கிளம்பி பூசைக்கு கால் பூசை, அரை பூசை முக்கால் பூசைக்கு நுழைந்து எந்தவித தயாரிப்புமில்லாமல் தெய்வீக விருந்தில் துணிச்சலோடு நுழைந்து ஆண்டவரை வாங்கும் பழக்கமும், வழக்கமும் எப்படி நுழைந்தது.. அது மட்டுமா செய்கிறோம்…

உபவாசத்தோடு நன்மை வாங்கிய பழக்கம் போய் நன்றாக வெளுத்து கட்டி உண்ட பிறகு திருப்பலியில் பங்கேற்றல்.. நன்மை வாங்கிய உடனே பொங்கலை வாயில் போட்டு அமுக்குதல், நன்மை வாங்கிய பின் டீ பிஸ்கட் வயிற்றில் ஊற்றுதல்..

நன்மை வாங்கிய உடனே அறிக்கைக்கு செவி சாய்த்து பராக்குகளுக்கு இடம் கொடுத்து சப்பென்று தரையில் அமர்ந்துகொள்ளும் பழக்கம் எப்போது முளைத்தது? அப்படியிருந்த நாம் இப்படி மாறிவிட்டோம்? இப்படியிருக்கும் நாம் மறுபடியும் அப்படி எப்போது மாறப் போகிறோம்?

நம் அன்பின் ஆண்டவர்.. தெய்வீக ஆண்டவர்.. அன்றும் அப்படித்தான் இருந்தார்.. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.. எப்போதும் அப்படித்தான் இருக்கப் போகிறார்.. அவர் மாறாத தெய்வம்.. 

நாம் மட்டும் ஏன் அடிக்கடி மாறுகிறோம்…

உயிர் அச்சத்தோடு வாழும் நாம் ஏன் கடவுளின் மேல் அச்சத்தோடு வாழக் கூடாது?

“ஞானத்தின் தொடக்கம் தெய்வபயம் “  - சீராக் 1 : 16

“தெய்வபயமே ஞானத்தின் நிறைவு “ – சீராக் 1 :20

ஞானத்தின் தொடக்கமும், ஞானத்தின் நிறைவும் தெய்வ பயமே..

மேலும் கடவுளின் சில உயிருள்ள வார்த்தைகள்..

“தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது. தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்; அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும். ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதிக் காலத்தில் பேறு பெற்றவன் ஆவான்; மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான். கடவுள்பால் உள்ள நேசமே மேன்மையுள்ள ஞானம். யார் யாருக்கு அது காணப்படுகிறதோ அவர்கள் தாங்கள் அதைக் கண்டதாலும், அதன் மாட்சிகளை அறிந்ததாலும் அதை நேசிக்கிறார்கள்.” சீராக் 1: 11-15

நற்கருணை நாதரை நேசிப்போம்.. விசுவசிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !