இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்களே, ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

பக்தியுள்ளவரான தோபியாஸ், "உன்னிடம் அதிகமிருந்தால், அதிகம் கொடு, குறைவாயிருந்தால், குறைவாகக் கொடு” (தோபி. 6:9). நாம் கொடுக்கும் தர்மத்தோடு சேர்ந்து, நம் இருதயத்தின் ஆயத்த நிலைதான், கைம்மாறாகக் கடவுளிடமிருந்து நாம் பெறும் பேறுபலனைத் தீர்மானிக்கிறது (மாற். 12:41).

நம் இணையதளமும், வானொலியும், புத்தக தளங்களும் உங்களோடு நெருக்கமான தொடர்பு அல்லது உறவு உள்ளவையாக இருக்கின்றன. அவை தாங்கள் நீடித்திருப்பதற்குத் தான தர்மங்களைச் சார்ந்திருக்கின்றன என்பதால், ஒவ்வொரு கத்தோலிக்கரும் ஞாயிறு காணிக்கைகள், மற்ற தன்னிச்சையான பங்களிப்புகளைக் கொண்டு பங்கிற்கு உதவுவது போலவே கத்தோலிக்க தளங்களுக்கும் தன் மனசாட்சியின்படி உதவக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இது திருச்சபையைப் போலவே புராதனமான வழக்கமாக இருக்கிறது. அப்போஸ்தலர் நடபடியாகமத்தில் (11:29), ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கு ஏற்றபடி திருச்சபைக்குத் தர்ம உதவி செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிரூபத்தில் (16:1-3), ஒவ்வொருவரும், வாரத்தின் முதல் நாளன்று, திருச்சபைக்கு உதவும்படி ஒரு சிறு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார். 

யூதர்கள் தங்கள் செல்வம் முழுவதிலுமிருந்து, அல்லது வருடாந்தர வருமானங்களில் இருந்து, தங்கள் தேவாலயம் மற்றும் ஜெபக்கூடங்களின் பராமரிப்பிற்காகப் பத்தில் ஒரு பாகத்தைச் செலுத்தினார்கள். "பூமியும், அதிலடங்கிய சகலமும், பூமண்டலத்தின் சக்கரமும், அதில் வாழுஞ் சகலருந் தேவனுக்குச் சொந்தம்” என்று தாவீதரசர் கூக்கூரலிடுகிறார் (சங்.23:1). ஆகையால், "உன்னிடம் அதிகமிருந்தால், அபரிமிதமாகக் கொடு; உன்னிடம் கொஞ்சமிருந்தாலும், மன உவப்போடு கொஞ்சமாகக் கொடுக்கக் கவனமாயிரு."

சம்பாவனை: நாம் தரும் தர்மங்கள் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை. “கொடுக்கிறவனுக்கு எதுவும் குறைவுபடாது.” “கொடுக்கிறவன், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறான்” (பழ.33:27). இந்த வாதத்தை அஞ்ஞான தத்துவவாதிகளும் கூட ஒத்துக்கொள்கிறார்கள். விசுவாச மறுதலிப்பாளனும், கிறீஸ்தவ வேதத்தின் பரம எதிரியுமான ஜூலியன் பேரரசன் இதற்கு ஓர் அற்புதமான உதாரணமாவான். “தர்மம் செய்து ஏழையான மனிதனை எனக்குக் காட்டுங்கள். நான் தர்மம் செய்வது, என் தாராளத்தையும் மீறி என்னை எப்போதும் அதிகச் செழிப்புள்ளவனாக்கியுள்ளது” என்று அவன் கூறினான். 

நம்மில் எவ்வளவு அதிகமானவர்கள் இதையே சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்! கடவுள் சரெப்தா விதவையின் எண்ணெயையும், மாவையும் முன்பு ஆசீர்வதித்தது போலவே, தாராளமும், சிநேகமும் மிகுந்த ஆன்மாக்களையும் ஆசீர்வதிக்கிறார். கொடுங்கள், உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கவும், குலுக்கவும் பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில் நீங்கள் அளந்த அளவினாலேயே உங்களுக்கும் பதில் அளக்கப்படும்” என்று நம் ஆண்டவர் கூறுகிறார் (லூக்.6:35,38).

தர்மம் செய்தல் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் வல்லமையுள்ள வழியாக இருக்கிறது என்பதை மிகச் சிலர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள். “தர்மம் (ஆத்துமத்தை) மரணத்தினின்று இரட்சிக்கும்; பாவங்களை நிவிர்த்தி பண்ணும்; (தேவ) கிருபையையும், நித்திய ஜீவியத்தையும் பெறுவிக்கும்” என்று பரிசுத்தரான தோபியாஸ் கூறுகிறார் (தோபி.12:9). 

இதற்கான சம்பாவனை? திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும், போதகருமான அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர் இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் அளிக்கிறார்: “அழிந்து போவதைக் கொடுத்து, நித்தியமான சம்பாவனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். நன்கு சிந்தியுங்கள்! கவனியுங்கள், நீங்கள் உலகப் பொருட்களைத் தருகிறீர்கள், பதிலுக்கு நித்திய காரியங்களைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் கண்டிப்பாய் இழந்து போகக் கூடிய ஒன்றைத் தருகிறீர்கள், அதற்குப் பதிலாக, நித்தியத்திற்கும் நீங்கள் சொந்தமாகக் கொண்டிருக்கப் போவதும், ஆயிரக்கணக்கான மடங்கு அதிக மதிப்புள்ளதுமான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறீர்கள். உண்மையாகவே, "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்களே, ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

Donate / காணிக்கை

தபசுக்கால தியானங்கள்!



தவக்காலமா? மனமாற்றத்தின் காலமா?

தவக்கால நோன்பு: தோற்றமும், வளர்ச்சியும்!

நோன்பு காலத்தின் வரையறை!

நோன்பின் தன்மை!

தவக்கால நோன்பில் தளர்வு!

பரிகார நாட்கள் பற்றிய இன்றைய நிலைப்பாடு!

சிலுவைப்பாதைப் பக்தி முயற்சி: தோற்றமும், வளர்ச்சியும்!

ஜெருசலேம் தரிசிப்பு!

பாவமன்னிப்புச் சலுகை!

சிலுவைப்பாதை - 14 நிலைகள்!

ஆலயங்களில் சிலுவைப்பாதை!

இன்று சிலுவைப்பாதை!

பாசோ PASSO: தோற்றமும், வளர்ச்சியும்!

சேசுநாதரின் திருப்பாடுகள்

சேசுநாதரின் பூங்காவன அவஸ்தை

சேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்படுகிறார்

சேசுநாதர் முள்முடி சூட்டப்படுகிறார்

சேசுநாதர் சிலுவை சுமந்து செல்கிறார்

சேசுநாதரின் கடைசி வசனங்கள்

இயேசுவின் விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் வழிந்ததன் பொருள் என்ன?

இயேசுவின் சிலுவை மரணத்தின் போது அவருடைய உடலமைப்பு மற்றும் அவருடைய முக்கிய உறுப்புகளின் நிலை பற்றிய விவரங்கள்

தொடர்புடைய தலைப்புகள்...

சுருக்கமான சிலுவைப் பாதை



🔔 தியான ஆராதனைகள்

திவ்விய நற்கருணையிலே யேசுநாதருக்கு மனுமக்களால் செய்ப்படுகிற சகல நிந்தைகளுக்குப் பரிகாரமாக 24 ஆராதனைப் பிரகரணங்கள்.

திருமணி ஆராதனை.

திருமணி தியான ஆராதனை. 

ஒருமணி திருமணி ஆராதனை. 

சேசுநாதர் சுவாமி கற்றுத்தந்த பரலோக மந்திர உபதேச தியானம்.

சேசுநாதர் சுவாமிக்கு செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்.

சேசு சுவாமியின் ஐந்து திருக்காய ஆராதனை. 

சேசு மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரம். 

வியாகுலங்கள் நிறைந்த மாதா மீது பக்தி. 

சேசுநாதருடைய திருப்பாடுகளின் கடிகாரம். 

துக்க தேவரகசியத் தியானம். 

சந்தோஷ தேவ இரகசியத் தியான செபமாலை.

துக்க தேவ இரகசியத் தியான செபமாலை.

மகிமை தேவ இரகசியத் தியான செபமாலை.

சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்கியங்கள்

திரிகால ஜெபம் - வியாக்கியானம்! 

பலன்களின் பொக்கிஷம். 

தேவ மாதா மந்திரமாலை

✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்

இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்

சேசுநாதர் தமது தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உம் மகன் என்றார். பின்னும் சீடனை நோக்கி: இதோ உன் தாய் என்றார்

ஏலி! ஏலி! லாமா சபக்தானி? என் சர்வேசுரா! என் சர்வேசுரா! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?

நான் தாகமாயிருக்கிறேன்

எல்லாம் முடிந்தது

பிதாவே, உம்முடைய கரங்களிலே என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன்

✠ வியாகுலப் பிரசங்கம்

01 யேசுகிறிஸ்துநாதர் பூங்காவனத்தில் தியானம் செய்கிறபோது பட்ட மரண அவஸ்தை

02 யேசுநாதர் யூதர்களால் பிடிபட்ட வரலாறு

03 யேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு அடிபட்ட வரலாறு

04 யேசுநாதர் முண்முடி தரிக்கப்பெற்றது

05 யேசுநாதர் பிலாத்துவினால் இதோ மனிதன் என்று சனங்களுக்குக் காண்பிக்கப்பட்டது

06 யேசுநாதர் சிலுவை சுமந்துகொண்டு போனது

07 யேசுநாதர் சிலுவையில் அறையுண்டது

08 யேசுநாதர் சிலுவையில் மரித்தது

09 யேசுநாதரைச் சிலுவையினின்று இறக்கினது 

நமது Catholic Tamil தளங்கள் உங்களின் மேலான பயன்பாட்டிற்கு...

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! எங்களுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தும் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களின் ஆசீரோடும், எங்களோடு உடனிருந்து எங்கள் அட்மின்கள் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபித்து எங்களோடு துணைநிற்கும் அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களோடும் நமது புதிய தளங்களை வெளியிட்டு அனைத்தையும் இலவசமாகவே கத்தோலிக்க விசுவாசிகளிடம் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் சிறப்பு ஆசீரோடு வெளியிட்டுள்ளோம். பயன்பெற அன்போடு வேண்டுகிறோம்.

 
 

நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது.

பழைய ஏற்பாட்டில், தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தைப் பேணுவதற்காகவும் சர்வேசுரன் ஏற்படுத்திய ஒரு விசே­ சட்டம் இருந்தது.  புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தமது ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ, அவர்களால் ஆதரிக்கப் பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  “கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் புசிக்கிறார்கள் என்றும், பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ? அவ்வாறே, சுவிசே­த்தைப் பிரசங்கிக்கிறவர்களும் சுவிசே­த்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார்  (1 கொரி. 9:13‡14). எனவே, தேவ கட்டளைப்படி, தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத்  தேவையானவைகளைத் தர கடமைப் பட்டிருக்கிறார்கள். 

இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்தக் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது.  திருச்சபையின் தொடக்க காலங்களில் இருந்தது போலவே, இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்கைதான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது.  மேலும், குருக்கள் கடவுளுக்குரியவையும், ஆத்துமங்களின் பராமரிப்புக்கு உரியவையுமான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத்தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டிருக்கிறது.  எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட ஒரு கடமையை அவர்களுக்கு நினைவு படுத்துகிறது.

நீதியின்படி, குருநிலையினர்  தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

திருச்சபையின் இக்கட்டளை  மிகக் கண்டிப்பான ஒன்று.  ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தக் கட்டளையை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக் கொள்ளப் படுகிறதா என்பதைத் தீர்மானிப்பது கடினம்.  அத்தகைய சூழலில் ஒரு பங்குக் குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்யத் தவறுகிற பங்கு விசுவாசியின் நிதி நிலைமை என்ன ஆகியவற்றை அது பெருமளவுக்கு சார்ந்திருக்கிறது.  ஆயினும், பல வருடங்களாகத் தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலார்களுக்குத் துர்மாதிரிகையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.

திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப் பட வேண்டும், தேவாலயங்களும், பள்ளிகளும் கட்டப்பட வேண்டும், தேவ வழிபாட்டோடு தொடர்புள்ள அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபைக் கட்டளையின் நோக்கமல்ல, மாறாக, இந்தப் பூலோகத்தில் கிறீஸ்து அரசருடைய இராச்சியம், ஆத்துமங்களின் இரட்சிப்பிற்காக எங்கும் பரவ வேண்டும் என்பதும் அதன் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.  குருநிலையினரையும், விசுவாசிகளையும், பிறர் சிநேகத்தின் கடடுக்களால் ஒன்றிப்பதும் இந்தக் கட்டளையின் நோக்கமாக இருக்கிறது.  ஏனென்றால் இந்தப் பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கிற இடங்களில் எல்லாம், கத்தோலிக்க விசுவாசம் செழித்து வளர்ந்து பரவுகின்றது.   குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுக்கு பிரதிபலனாக, அவர்களுக்குப் போதுமானதைத் திருப்பிச் செலுத்துவதில்லையா? ஏனென்றால் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஞானத் தேவைகள் அனைத்திலும் அவர்களுக்கு உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா?  விசுவாசிகள் திருச்சபையின் மீது பொழிகிற சகல உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோருக்கு மட்டுமல்லாமல், அவற்றைத் தருபவர்களுக்கும் நன்மை விளையச் செய்பவையாக இருக்கின்றன.  ஏனென்றால் திருச்சபையும், அது  கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.

தேவ கற்பனைகளை விசுவாசிகள் அனுசரிப்பதை உறுதி செய்வதற்காகவும், மனிதனின் நிலையற்ற தன்மைக்கு எதிரான ஒரு தடையை எழுப்பவும், அவனது பலவீனத்தில் அவனுக்கு உதவவும், தனது சிருஷ்டிகரின் மட்டிலும், அயலார்கள் மட்டிலும், தன் மட்டிலும் அவனுக்குள்ள கடமைகளை அவனுக்கு நினைவுபடுத்தவும், தனது நித்திய இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் மேற்கொள்ள வேண்டிய வழிகளை அவன் அறியச் செய்யவுமே பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை இந்த ஆறு கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சபையின் வார்த்தைகளுக்குச் செவி சாய்த்து, சாகும் வரை கீழ்ப்படிதல் உள்ளவர்களாக, கிறீஸ்துநாதரின் நல்ல வீரர்களாக உழைப்பவர்கள் அனைவரும், “சர்வேசுரன் தம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவிய கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள்” (இயாகப்பர் 1:12).

விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவுமுறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும், கணவன் மனைவியாக வாழ்வதாகத் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும்.  மரணம் வரை ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது.   “சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக” என்று சேசுநாதர் கூறியபோது (மத்.19:6) அவர் இதையே தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவத் திரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும் தேவத் திரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் ஜீவியரின் தேவத் திரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும். அதாவது திருமணம் செய்யும் ஆணும், பெண்ணும் சாவான பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவத் திரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தேவையான வரப்பிரசாதத்தைத் தருகிறது; தங்கள் பிள்ளைகளைத் தேவ         சிநேகத்திலும், தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப் படாமல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே, மெய்விவாக அனுமானத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும் பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு  திருமணம், செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு, ஆணும் பெண்ணும், இரண்டு சாட்சிகள் முன்னிலையில், பங்குக் குருவுக்கு முன்பாக, அல்லது அவரால் முறைப்படி அனுமதிக்கப் படுகிற ஒரு குருவுக்கு முன்பாக, தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பது அவசியம்.  எனவேஒரு அரசு அதிகாரியின் முன்போ, அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியரின் முன்போ நிகழ்கிற ஒரு கத்தோலிக்கனின் திருமணம், சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல.  ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளுக்கு அவன் அல்லது அவள் கட்டுப்படவில்லை.

அடுத்ததாக, ஒரு திருமணம் செல்லுபடியாக, ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளவர்களாகவும், சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். விவாக ரத்து செய்து கொண்ட, அல்லது, திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை.

இறுதியாக, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கக் கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்கக் கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் உள்ளன.  அவை, தடை செய்கிற விக்கினம் மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்கிற விக்கினம் என்பது, விசே சலுகை பெறப்படாத நிலையில்,  திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு, அல்லது உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், அல்லது, துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு என்பன போன்றவற்றில் ஏதாவது ஒரு வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால், அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்கர் ஒருவரும், மற்றொருவர் ஏதாவது ஒரு பதித சபையில், அல்லது பிரிவினை சபையில் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதைத் திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சியப் போக்கிற்கும், விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் இட்டுச் சென்று விடும் என்பதால் திருச்சபை கலப்புத் திருமணங்களைத் தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டுமே இந்த விக்கினத்திற்குத் திருச்சபையானது விலக்கு அளிக்கிறது. கலப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நியாயமானதும், தீவிரமுள்ளதுமாகிய காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவரில் கத்தோலிக்கர் அல்லாத ஒருவர், கத்தோலிக்கராக இருக்கிற மற்றவருக்கு, விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்தத் தடையும் விதிப்பதில்லை என்ற உத்தரவாதம் தர வேண்டும். மேலும்  அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கிற குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞான ஸ்நானமும், கத்தோலிக்க வேதக் கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாததாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது.  திருமணத்தைச் செல்லாததாக்குகிற விக்கினங்கள், குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண பந்தம், இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தித் திருமணம், உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், இரத்த உறவு, நெருங்கின உறவு, ஞானஸ்நானத்தின் போது ஏற்பட்ட ஞானத் தாய் அல்லது உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பன், ஞானப் பிள்ளை என்னும் உறவு ஆகியவை ஆகும்.

திருமணத்திற்கு முந்திய மூன்று அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குக் குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால், தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே தங்கள் பங்குத் தந்தைக்கு அது பற்றி அறிவித்து விட வேண்டும்.

கத்தோலிக்கர்கள் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமன காலம், தவக்காலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களில், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறீஸ்துமஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும், திருமணங்கள் அர்ச்சிக்கப் படுவதைத் திருச்சபை தடை செய்கிறது.    திருமணத்தை அர்ச்சித்தல் என்பதற்கு திருமணப் பூசையை அதற்குரிய திருமண மந்திரித்தலோடு நிறைவேற்றுவது என்பது பொருள். 

தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் மெய்விவாக தேவத்திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவ இஷ்டப் பிரசாதம் அதிகரிக்கிறது.  மேலும் திருமண அந்தஸ்துக்கு அவசியமான உதவி வரப் பிரசாதங்களைப் பெறவும் அவர்கள் உரிமை பெறுகிறார்கள்.  இந்த உதவி வரப்பிரசாதங்கள், பரஸ்பர நேசத்தை வளர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையைப் பேணவும், குழந்தைகளுக்கு வேதக் கல்வி வழங்கவும், திருமண வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தாங்கிக் கொள்ளவும் அவசியமானவை.