அர்ச். பிலோமினம்மாள் செபமாலை.

திருச்சிலுவையில்.
விசுவாச மந்திரம் சொல்லவும்.

3 வெள்ளை மணிகளில்!
மூவொரு இறைவனை நினைத்து 3 பரலோக மந்திரம் சொல்லவும், பிதாவுக்கும்...

13 சிகப்பு மணிகளில்!
அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாவே வாழ்க! மரியன்னைக்குப் பின் உமது தெய்வீக மணவாளனிடம் எனக்காக மனுப் பேசுகிறவரே! இப்பொழுதும், என் மரண நேரத்திலும் எனக்காக மன்றாடும். இயேசு, மரியாவின் அன்புள்ள மகளே! உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

பதக்கத்தில்!
புகழ்மிக்க அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாவே! இயேசுவுக்காக தைரியமாய் உம் இரத்தத்தைச் சிந்தினீரே, உமது வாழ்விலும், விசேஷமாய் உம் மரணத்திலும் ஆண்டவர் உம்மீது பொழிந்த எல்லா வரங்களுக்காகவும் அவரை வாழ்த்துகிறேன். மகிமையாலும், வல்லமையாலும் அவர் உம்மை முடிசூட்டியதற்காக அவரைத் துதித்து மகிமைப்படுத்துகிறேன். உமது மன்றாட்டின் வழியாக அவரிடம் நான் கேட்கும் மன்றாட்டுக்களை பெற்றுத் தருவீராக.

ஆமென்.

குறிப்பு : இச்செபமாலையின் 13 சிகப்பு மணிகள் புனித பிலோமினம்மாவின் வயதைக் குறிக்கும். 3 வெள்ளை மணிகள் அவருடைய கன்னிமையைக் குறிக்கும்.