பக்தியுள்ளவரான தோபியாஸ், "உன்னிடம் அதிகமிருந்தால், அதிகம் கொடு, குறைவாயிருந்தால், குறைவாகக் கொடு” (தோபி. 6:9). நாம் கொடுக்கும் தர்மத்தோடு சேர்ந்து, நம் இருதயத்தின் ஆயத்த நிலைதான், கைம்மாறாகக் கடவுளிடமிருந்து நாம் பெறும் பேறுபலனைத் தீர்மானிக்கிறது (மாற். 12:41).
நம் இணையதளமும், வானொலியும், புத்தக தளங்களும் உங்களோடு நெருக்கமான தொடர்பு அல்லது உறவு உள்ளவையாக இருக்கின்றன. அவை தாங்கள் நீடித்திருப்பதற்குத் தான தர்மங்களைச் சார்ந்திருக்கின்றன என்பதால், ஒவ்வொரு கத்தோலிக்கரும் ஞாயிறு காணிக்கைகள், மற்ற தன்னிச்சையான பங்களிப்புகளைக் கொண்டு பங்கிற்கு உதவுவது போலவே கத்தோலிக்க தளங்களுக்கும் தன் மனசாட்சியின்படி உதவக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இது திருச்சபையைப் போலவே புராதனமான வழக்கமாக இருக்கிறது. அப்போஸ்தலர் நடபடியாகமத்தில் (11:29), ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கு ஏற்றபடி திருச்சபைக்குத் தர்ம உதவி செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிரூபத்தில் (16:1-3), ஒவ்வொருவரும், வாரத்தின் முதல் நாளன்று, திருச்சபைக்கு உதவும்படி ஒரு சிறு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்.
யூதர்கள் தங்கள் செல்வம் முழுவதிலுமிருந்து, அல்லது வருடாந்தர வருமானங்களில் இருந்து, தங்கள் தேவாலயம் மற்றும் ஜெபக்கூடங்களின் பராமரிப்பிற்காகப் பத்தில் ஒரு பாகத்தைச் செலுத்தினார்கள். "பூமியும், அதிலடங்கிய சகலமும், பூமண்டலத்தின் சக்கரமும், அதில் வாழுஞ் சகலருந் தேவனுக்குச் சொந்தம்” என்று தாவீதரசர் கூக்கூரலிடுகிறார் (சங்.23:1). ஆகையால், "உன்னிடம் அதிகமிருந்தால், அபரிமிதமாகக் கொடு; உன்னிடம் கொஞ்சமிருந்தாலும், மன உவப்போடு கொஞ்சமாகக் கொடுக்கக் கவனமாயிரு."
சம்பாவனை: நாம் தரும் தர்மங்கள் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை. “கொடுக்கிறவனுக்கு எதுவும் குறைவுபடாது.” “கொடுக்கிறவன், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறான்” (பழ.33:27). இந்த வாதத்தை அஞ்ஞான தத்துவவாதிகளும் கூட ஒத்துக்கொள்கிறார்கள். விசுவாச மறுதலிப்பாளனும், கிறீஸ்தவ வேதத்தின் பரம எதிரியுமான ஜூலியன் பேரரசன் இதற்கு ஓர் அற்புதமான உதாரணமாவான். “தர்மம் செய்து ஏழையான மனிதனை எனக்குக் காட்டுங்கள். நான் தர்மம் செய்வது, என் தாராளத்தையும் மீறி என்னை எப்போதும் அதிகச் செழிப்புள்ளவனாக்கியுள்ளது” என்று அவன் கூறினான்.
நம்மில் எவ்வளவு அதிகமானவர்கள் இதையே சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்! கடவுள் சரெப்தா விதவையின் எண்ணெயையும், மாவையும் முன்பு ஆசீர்வதித்தது போலவே, தாராளமும், சிநேகமும் மிகுந்த ஆன்மாக்களையும் ஆசீர்வதிக்கிறார். கொடுங்கள், உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கவும், குலுக்கவும் பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில் நீங்கள் அளந்த அளவினாலேயே உங்களுக்கும் பதில் அளக்கப்படும்” என்று நம் ஆண்டவர் கூறுகிறார் (லூக்.6:35,38).
தர்மம் செய்தல் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் வல்லமையுள்ள வழியாக இருக்கிறது என்பதை மிகச் சிலர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள். “தர்மம் (ஆத்துமத்தை) மரணத்தினின்று இரட்சிக்கும்; பாவங்களை நிவிர்த்தி பண்ணும்; (தேவ) கிருபையையும், நித்திய ஜீவியத்தையும் பெறுவிக்கும்” என்று பரிசுத்தரான தோபியாஸ் கூறுகிறார் (தோபி.12:9).
இதற்கான சம்பாவனை? திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும், போதகருமான அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர் இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் அளிக்கிறார்: “அழிந்து போவதைக் கொடுத்து, நித்தியமான சம்பாவனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். நன்கு சிந்தியுங்கள்! கவனியுங்கள், நீங்கள் உலகப் பொருட்களைத் தருகிறீர்கள், பதிலுக்கு நித்திய காரியங்களைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் கண்டிப்பாய் இழந்து போகக் கூடிய ஒன்றைத் தருகிறீர்கள், அதற்குப் பதிலாக, நித்தியத்திற்கும் நீங்கள் சொந்தமாகக் கொண்டிருக்கப் போவதும், ஆயிரக்கணக்கான மடங்கு அதிக மதிப்புள்ளதுமான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறீர்கள். உண்மையாகவே, "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்களே, ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.”