பனிமய மாதா ஜெபமாலை.

குறிப்பு. பின்வரும் ஐந்து காரணிக்கத்துக்குத் (தேவரகசியங்கள்) தனித்துச் சொன்னால் 5 வருஷப் பலன், மற்றவர்களோடு சொன்னால் 10 வருஷப் பலன். பாவசங்கீர்த்தனம் பண்ணி நற்கருணை பெற்றும், சற்பிரசாதத்திற்கு முன் எழுந்தேற்றமில்லாமலும் சொன்னால் பரிபூரணப் பலன். ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபமாலையோடு சொன்னால் வேறுபலன்கள் உண்டு.

1. முதல் வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் எங்களுக்காகப் பாடுபடத் துவங்கி, பூங்காவனத்திலே அனாதி பிதாவை நோக்கி வேண்டுதல் செய்திருக்கும்போது சர்வாங்கமும் உதிரமாக வேர்த்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்கள் செய்கிற சகல நற்கிரியைகளையும் சர்வேசுரனுக்கு வேண்டுதலோடே துவக்கவும், முடிக்கவும் எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

2. இரண்டாவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் கற்றூணிலே கட்டுண்டு அடிப்பட்டதினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து எங்கள் பாவத்துக்கு வருகிய ஆக்கினையை, சர்வேசுரன் விலக்கத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

3. மூன்றாவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் பரிகாச ராசனாக முள்முடி தரித்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, உலகத்தார் எங்களுக்காகப் பண்ணுகிற பரிகாச நிந்தனைகளை நாங்கள் நல்ல மனதோடு பொறுத்துக்கொள்ள
எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

4. நான்காவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் பாரமான சிலுவையைச் சுமந்து கபால மலைக்குப் போகிறதைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, எங்கள் பாவத்தினுடைய பாரமும் கஸ்தியும் குறையத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

5. ஐந்தாவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையிலே அறையுண்டு மரித்ததைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்களும் அவருடைய நேசத்துக்காக எங்கள் பிராணனைக் கொடுக்கத் தயவோடிருக்கும்படி எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...

ஆமென்!