குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா உம் திருமுன் குருகுலத்தார் திருப்பணியாற்றும்போது, உமது பெயரின் மகிமையும் மாண்பும் விளங்க அவர்களுடைய திருவுடைகளை மோசே வழியாக ஏற்பாடு செய்தீர். எங்கள் வேண்டுதல்களுக்கு இரங்கி, வானின்று உமது அருளைப் பொழிந்து, குருத்துவப் பணிக்குரிய இவ்வுடைகளை ஆசீர்வதித்துப் புனிதமாக்கியருளும். இதனால் இவை திருவழிபாட்டிற்கும் அருட்சாதனக் கொண்டாட்டங்களுக்கும் ஏற்றவையாகிட இறையாசி பெறுவனவாக. மேலும் இவற்றை அணியும் ஆயர்களும் குருக்களும் திருப்பணியாளர்களும் தூய ஆவியின் ஏழு அருட்கொடைகளும் உறுதியான பாதுகாப்பும் பெறுவார்களாக. அவர்கள் உம் அருட்சாதனங்களை உள்ளுணர்வோடு நிறைவேற்றி, உமக்கு ஏற்றவாறு பணிபுரியவும், இவ்வாறு பக்திப்பற்றுதலும் அமைதியும் கொண்டு இறுதிவரை நிலைத்து நிற்கவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய ...
எல்: ஆமென்.
(குரு அவற்றின்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)