வேதசாட்சியான அர்ச். ஆக்னசம்மாளை நோக்கி நவநாள் ஜெபம்

(திருநாள் : ஜனவரி 21)

இளம்பிராயத்திலேயே சேசுநாதர் சுவாமிக்கு உம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து அவரை உமது ஏக பத்தாவாகத் தெரிந்து கொண்ட அர்ச். ஆக்னசம்மாளே, இவ்வுலக சுகபோகமெல்லாம் வீணும் விழலுமென்று நிந்தித்துத் தள்ளி, நித்திய சீவியமடைய சர்வ நிர்ப்பந்த வாதனைகளையெல்லாம் அனுபவித்து கன்னிமை முடியும், வேதசாட்சி முடியும் பெற்ற கர்த்தரின் உன்னத பத்தினியே, உம்மைப்போல் நாங்களும் எங்கள் சத்துருக்களாகிற உலகம் பசாசு சரீரத்தை ஜெயிக்கவும் எங்களுக்கு நேரிடுகிற துன்பதுரித பொல்லாப்புகளை எல்லாம் நல்ல மனதோடு பொறுக்கவும், கடைசியாய் தூய இருதயத்தோடு மரிக்கவும், நாங்கள் பாத்திரவான்களாகும்படிக்கு எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.

பர. அருள். திரி.