குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் உருவத்தைப் படத்திலோ சுரூபத்திலோ வடித்து, அவற்றை ஊனக் கண்களினால் நோக்குந்தோறும், எங்கள் ஞானக் கண்களினால் அவர்களுடைய செயல்களையும் புனிதத்தையும் தியானிக்க அருளினீரே; புனிதரான ............................இன் சுரூபத்தைப் / படத்தை / கெபியை அர்ச்சித்துப் புனிதப்படுத்த உம்மை இறைஞ்சுகிறோம். இச்சுரூபத்தைப் / படத்தை / கெபியை பக்தியுடன் பயன்படுத்தி உம்மை மகிமைப்படுத்தும் அனைவரும், இவ்வாழ்வில் உம் அருளைப் பெற்று, மறுவாழ்வில் முடிலில்லா மகிமை அடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு சுரூபத்தின் / படத்தின் / கெபியின் மேல் தீர்த்தம் தெளிப்பார்.)