திரு இருதயப் படத்தைப் புனிதப்படுத்துதல்

குரு:  ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர்.அவரே. 

குரு:  ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு:  மன்றாடுவோமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே பேறான திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திரு இருதயத்தை வணங்க நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் படத்தை (சுரூபத்தை) அர்ச்சித்துப் புனிதப்படுத்த உம்மை இறைஞ்சுகின்றோம். இந்தப் படத்தின் (சுரூபத்தின்) முன் உம் திருமகனைப் பக்தியுடன் வழிபட்டு மகிமைப்படுத்தும் மக்கள் அனைவரும், இவ்வாழ்வில் அவரது அன்புப் பாதையில் நடந்து, மறுவாழ்வில் முடிவில்லா மகிமையடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய.........

எல்: ஆமென்.

(குரு படத்தின்மேல் தீர்த்தம் தெளிக்கிறார்.)