ஆலயம் திறந்த பின்பும் டி.வி திருப்பலி எதற்கு?

டி.வி. திருப்பலிக்காரர்களே.. விழித்து எழுங்கள்..

ஆலயம் திறக்கப்பட்டுவிட்டது.. திருப்பலிகள் நிறைவேற்றப்படுகிறது.. பின் ஏன் இன்னும் டி.வியில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.. மக்களை நேரடி திருப்பலியில் பங்கேற்கத்தானே வலியுறுத்த வேண்டும்.. முதலில் டி.வி திருப்பலிக்கு அறிக்கையிட்டவர்கள் இப்போது நேரடி திருப்பலிகளில் மக்களைப் பங்கேற்க வலியுறுத்த வேண்டும் அல்லவா? இது தவறான வழிகாட்டுதல் ஆகிவிடாதா?

அன்பான கத்தோலிக்க மக்களே! இப்போது நேரடியாக திருப்பலிகள் நிறைவேற்றப்படுகிறது. நாம் ஆலயம் சென்று நம்மை தயாரித்து தயாரான மன நிலையில் திருப்பலியில் பங்கேற்று நம் திவ்ய நற்கருணை ஆண்டவரை நாவில் பெற்று அவரை ஆராதிப்பதுதான் முறை.. சரியான.. தகுதியான செயல்.. ஆனால் அதை விட்டுவிட்டு

ஆனால் நான் டி.வி திருப்பலிதான் பார்ப்பேன்.. அதுதான் எனக்கு சவுகரீகமாக இருக்கிறது.. என்று நினைப்போரே.. ஐயோ உங்களுக்கு கேடு வந்தே தீரும்.. அதுவும் கண்டிப்பாக வந்தே.. தீரும்..

எதையுமே ஆரம்பித்து வைப்பது சுழபம்.. ஆனால் அதை மறுபடி மாற்றி பழைய நிலைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினம்.. இதில் கொடுமை என்னவென்றால்.. ஆரம்பித்து  வைக்க மெனக்கெட்டவர்கள்.. அதை மாற்றி அமைக்க மெனக்கெடுவது இல்லை..

இப்போது டி.வி திருப்பலிகள் தவறான முன்னுதாரங்களாக மாறி வருகின்றன. பலர் அதையே பார்த்துவிட்டு ஆசை நன்மை வாங்கிக்கொண்டு சோம்பேரிகளாக மாறி வருவது வேதனைக்குரியது..

ஆன் லைன் திருப்பலிகள் இனி வேண்டாம்.. 

ஆலயத்திற்கு நடக்க தெம்பிருந்தும், கால்கள் நன்றாக இருந்தும்.. கடவுளை ஏமாற்றிக்கொண்டு.. அதாவது கடவுளை ஏமாற்றுவதாக நினைத்து உங்களை  நீங்களே ஏமாற்றும் சோம்பேரிகளே ! நொண்டிச்சாக்குகள் சொல்லும் சாக்குபோக்கிகளே ! தயவு செய்து உடனடியாக உங்களைத் திருத்துங்கள்..

கடவுள் இனிமையானவர்.. மென்மையானவர்.. மட்டுமல்ல அடித்து நொறுக்குவதிலும், தண்டிப்பதிலும் வல்லவர்.. கடவுளின் நீதிக்கு முன் நாம் யாரும் நிற்கக் கூட முடியாது..

அன்பான மக்களே.. நமக்கு எது சவுகரீயம் என்பது முக்கியமல்ல.. எதைச் செய்ய வேண்டும்.. எதைச் செய்யக் கூடாது என்பதுதான் முக்கியம்.. ஒளிபரப்புபவர்கள் ஒளிபரப்பட்டும்.. அதில் நடக்க முடியாதவர்கள்.. நோயாளிகள் பயன் அடையட்டும்..

நமக்கு வேண்டாம்.. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. ஆலயங்களில் திருப்பலி நடைபெறும் போது அதற்கு செல்லாமல் வீட்டில் திருப்பலி பார்த்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்காது.. மாறாக சாபம்தான் வந்து சேரும்.. கடவுளின் சாபத்தை வீட்டில் இருந்து சம்பாதிக்கப்போகிறீர்களா? மாறாக கடவுளைத் தேடி சென்று ஆசீர்வாதத்தைப் பெறப்போகிறீர்களா?

உங்களுக்கு சாபம் வேண்டுமா? ஆசீர்வாதம் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

குறிப்பு : ஏதோ ஒரு இடத்தில் டி.வி. திருப்பலிக்காக யாரோ ஒருவர்.. ஆலயத்திலிருந்து திவ்ய நற்கருணை கொண்டுவந்து டி.வி. திருப்பலிக்காரர்களுக்கு கொடுப்பதாக தகவல்..

கொண்டுவந்து கொடுப்பவரும்.. உண்பவர்களும்… சாபத்தை அல்ல அதற்கும் மேலான தண்டனையை பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.. இந்த கொலைபாதகச் செயலைத் தடுக்காதவர்களும், அதை கண்டுகொள்ளாதவர்களும் சேர்ந்து சம்பாதிக்கிறார்கள்..

நம் பரிசுத்த கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது.. அவரிடம் நொண்டிச்சாக்குகள் பலிக்காது..அவர் முகத்தாட்சண்யம் பார்க்காத நீதியுள்ள கடவுள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது… மறக்கவே கூடாது..

டி.வி. திருப்பலிக்காரர்களே..  விழித்து எழுங்கள்.. ஆலயம் நோக்கி விரையுங்கள்.. உங்களை கடவுளின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !