மறையுரையில் பிற மத புத்தக மேற்கோள்கள் ஏன்?

(இது எல்லாருக்கும் உள்ள பதிவு அல்ல)

சில தந்தையர்கள் மறையுரையில் மேற்கோள்களை காட்ட பகவத் கீதை, தேவராம் என்று எங்கெல்லாமோ போகிறார்கள்.. பழமொழி உதாரணங்களுக்கு கூட நாடுகளைக் கடந்து சென்று விடுகிறார்கள்..

ஏன் பைபிளில் அவர்களுக்கு அந்த அளவுக்கு தட்டுப்பாடாகிப்போனதா? புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் உதாரணங்கள் இல்லையா? பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாட்டில் கடவுளுக்கு பிரியமாக வாழ்ந்த, சாட்சியாக வாழ்ந்த  எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

நம் சர்வேசுவரன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எத்தனையோ எளிய உவமைகளைச் சொல்லியிருக்கிறார்.. இரு புறமும் கருக்கு வாய்ந்த உயிருள்ள வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்..

அந்த உதாரணங்கள், வார்த்தைகள் எல்லாம் கண்களுக்கு தெரியவில்லையா?

ஏன் அங்கு சென்று எடுக்க வேண்டும்..? என்ன காரணமாக இருக்க முடியும்?

1. இன்றைக்கு பாதர் சூப்பராக பிரசங்கம் வைத்தார்..

2. அவரு நிறைய நூல்கள், புத்தகங்களை வாசிக்கிறார்..

3. அவருக்கு நிறைய மொழிகள் தெறியும்.

4. அவர் பல நாடுகளுக்கு போய் வந்தவர்..

5. அவருக்கு அறிவு அதிகம்.. என்னாமா பிரசங்கம் வைக்கிறார்.

என்று மக்கள் பேச வேண்டுமா?

1. இன்றைக்கு பாதர் பிரசங்கம் என் உள்ளத்தைத் தொட்டது..

2. என் ஆன்மாவை ஊடுருவியது..

3. நான் எவ்வளவு பெரிய பாவியா இருந்திருக்கிறேன்..

4. இனி நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன்..

5. இன்றிலிருந்து மனம் திரும்புவேன்..  நாலையில இருந்து ஒரு புது மனுசன், மனுஷியை பார்க்கபோறீங்க..

இவற்றில் எது முக்கியம்?

சாதாரன கடல் தொழில் செய்து ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராயப்பர் ஆற்றிய முதல் மறையுரையில் மனம் திரும்பிய ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 5000. அப்படியென்றால் பெண்கள், சிறுவர்களைச் சேர்த்தால் கண்டிப்பாக 8000 பேராவது இருக்கலாம் அல்லவா? ( அப்போஸ்தலர் பணி 4 :4)

ராயப்பர் எந்த எந்த நூல்களையெல்லாம் புரட்டி பார்த்துவிட்டு பிரசங்கம் வைத்தார்? இன்னும் சொல்லப்போனால் அப்போது பைபிள் கூட கிடையாது.. அல்ல சொல்லாடல்கள், அடுக்கு மொழிகள் எதையாவது பயன்படுத்தினாரா? அல்ல வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தினாரா?

சாதாரன, எளிய மறையுரை அவர் கண்டதையும், கேட்டத்தையும் விசுவசித்ததையும், அனுபவித்ததையும் போதித்தார். பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டார்.. அங்கு மனமாற்றம் நிகழ்ந்தது..

நாம் எதை அடிப்படையாக வைத்து போதிக்கிறோம்.. மனமாற்றத்தை அடிப்படையாக வைத்து போதிக்கிறோமா? அல்லது சுய பாராட்டுகள்களுக்காக பிரசங்கம் வைக்கிறோமா? இரண்டாவது என்றால் அந்த மறையுரை அர்த்தமற்றது; தேவையற்றது; குப்பைக்குச் சமம்.

ஒரு புனிதர் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் நாம் உதாரணமாகக் கொள்ளலாம்..

புனித சுவாமி நாதர் (St.Dominic) மறுநாள் பாரீசில் ஒரு புகழ் பெற்ற ஆலயத்தில் போதிக்க வேண்டியிருந்தது.. அது உலகில் சிறந்த அறிவாளிகள் என்று மக்கள் கருதுபவர்கள் வரக்கூடிய இடம்..

அதற்காக நம் புனிதர் இரவெல்லாம் கண்விழித்து பெரிய பெரி மேற்கோள்கள் எல்லாம் தயார் செய்து விழுந்து விழுந்து பிரசங்கம் தயார் செய்துவிட்டார். ஆனால் நம் திரு மாதா காட்சிகொடுத்து “ மகனே நீ தயாரித்து வைத்திருக்கும் பிரசங்கம் வேண்டாம். இதோ இந்த புத்தகத்தில் இருப்பதை வாசித்து இதை போய் போதி “ என்று சொல்லிவிட்டார்கள்..

நம் புனிதர் மாதா கொடுத்த புத்தகத்தை நன்றாக வாசித்து மனதில் இருந்தி போதித்தார்.. அதுவும் எளிய மறையுரைதான்.. அந்த மறையுரையைக் கேட்டு அங்கு வந்திருந்தவர்கள் கிட்டதட்ட அனைவருமே மனம் திரும்பினர்..

ஒரு மறையுரையின் வெற்றி வாய்ஜாலத்திலும், வார்த்தைஜாலத்திலும் அடங்கியிருக்கவில்லை.. ஆன்ம மனமாற்றத்தில்தான் அடங்கியிருக்கிறது..

அதுவுமில்லாமல் வேறு மத புத்தகங்களை மேற்கோள் காட்டுவது என்பது கிட்டதட்ட கடவுளைக் காட்டிக்கொடுப்பதற்கு சமம்.. ஏனென்றால் அதனுடைய விளைவு விபரீதமானது.. அது தயவு செய்து வேண்டாமே…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !