புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை

புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை
பணிவாய் புலன்களே மேரி மாதா சந்நிதியில்

1. அவள்தான் உன் அன்னையே
உனக்காய் ஜெபிப்பவளுமே
உன் ஆத்ம வாஞ்சையுமாய் இருப்பாள் அவள் என்றுமே
ஒருபோதும் மறவாமலே புவிமீது காத்திடுவாள்

2. தெய்வமாதா தான் அவளே
செய்வதெல்லாம் மகத்துவமே
போக்குவாள் உன் துயரங்களை
துதிப்பாய் நீ அவள் அடியே
வேளாங்கண்ணியளாம் அன்னையை மறவாமலே தினமும்