தேவமாதா படிப்பித்த செபம்.

ஓ! பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே, சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே, ஆதிகால முதல் பசாசின்  தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் இறைவன் உமக்குத் தந்தருளினாரே!

தேவரீர் தயவுசெய்து உமது இராணுவச் சேனைகளை இப்பூமியில் அனுப்பி, அவர்கள் உமது வன்மையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும்,பசாசுகளை எங்கும் எதிர்த்து தாக்கி பின்தொடர்ந்து துரத்தி அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி, நரக பாதாளத்திற்கு திரும்பவும் அவைகளை விரட்டி ஒட்டும்படி கிருபை செய்வீராக!

பரிசுத்த சம்மனசுகளே! அதிதூதர்களே! எங்களை காப்பாற்றி  ஆதரிப்பீர்களாக..

ஆமென்.