மழைக்காக ஜெபம்.

தப்பில்லாத கிரமத்தோடு சகலத்தையும் நடப்பிக்கிற சர்வேசுரா! நாங்கள் பிழைக்கவும் நடக்கவும் இருக்கவும் காரணமான கர்த்தாவே! எங்களுக்குப் போதுமான மட்டும் ததிமாரி பெய்யவும், தவச தானிய முதலான சம்பத்துக்கள் ஓங்கி அதிகரிக்கவும் கிருபை செய்தருளும். நாங்கள் அதிக தார்ப்பரியத்தோடு நன்றியறிந்த தர்ம நெறியில் நடந்து உமக்குத் திருப்பணிபுரிந்து மோட்ஷ சம்பத்தை நாடி அடைய அனுக்கிரகித்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும். ஆமென்.