நற்கருணைப் பேழையைப் புனிதப்படுத்துதல்

குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக. 

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் திருவுடலை வழிபடவும், நோயாளிகளுக்குத் திருவுணவாக வைத்துக் காப்பதற்காகவும் இப்பேழையை அமைத்துள்ளோம். உமது அருளைப் பொழிந்து இதனை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்துவீராக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)