இன்றைய புனிதர் - ஜனவரி 1 - புனிதர் ஜோசஃப் மேரி டொமாஸி ***


புனிதர் ஜோசஃப் மேரி டொமாஸி

(St. Joseph Mary Tomasi)

அறிஞர், சீர்திருத்தவாதி மற்றும் கர்தினால்:

(Scholar, Reformer, and Cardinal)

பிறப்பு: செப்டம்பர் 12, 1649

லிகாடா, சிசிலி இராச்சியம், அரகன்

(Licata, Kingdom of Sicily, Crown of Aragon)

இறப்பு: ஜனவரி 1, 1713 (வயது 63)

ரோம், லாஸியோ, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Rome, Lazio, Papal States)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: செப்டம்பர் 29, 1803

திருத்தந்தை ஏழாம் பயஸ்

(Pope Pius VII)

புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 1986

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜனவரி 1

பாதுகாவல்:

கத்தோலிக்க வழிபாட்டு முறை

(Catholic Liturgy)

புனிதர் ஜோசஃப் மேரி டொமாஸி, ஒரு இத்தாலிய "தியேட்டின்" (Theatine) சபையைச் சேர்ந்த கத்தோலிக்க குருவும், அறிஞரும், சீர்திருத்தவாதியும், கர்தினாலுமாவார்.  கி.பி. 20ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக அவரது பாண்டித்தியம் இருந்தது. கி.பி. 1803ம் ஆண்டில் திருத்தந்தை ஏழாம் பயஸ் (Pope Pius VII) அவர்களால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவரை, கி.பி. 1986ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) அவர்கள் புனிதராக உயர்த்தி அருட்பொழிவு செய்தார்.

டொமாஸி, "அரகன்" (Crown of Aragon) அரசின், "சிசிலி" (Kingdom of Sicily) இராச்சியத்தின், பகுதியான "லிகாடா" (Licata) நகரில், "லம்பேடுசாவின்" (First Prince of Lampedusa) முதல் இளவரசர் "கியுலியோ டொமாஸி" (Giulio Tomasi) மற்றும் அவரது மனைவி "ரோசாலியா ட்ரெய்னா" (Rosalia Traina) ஆகியோருக்கு மகனாக, கி.பி. 1649ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 12ம் தேதி பிறந்தார். அவரது வாழ்க்கை, ஆரம்ப காலத்திலிருந்தே கடவுளை நோக்கியதாக இருந்தது. குடும்பத்தின் இல்லத்தில் வளர்க்கப்பட்டு கல்வி கற்றார். அங்கு அவர்களுக்கு செல்வமோ, தார்மீகப் பயிற்சியோ இல்லை. அவர் படிப்பதற்கும் பக்திக்கும் தமது மிகவும் திறமையை சான்றுகளாக வழங்கினார். இவரது பெற்றோர், இதற்கும் அவரது சொந்த கிறிஸ்தவ உருவாக்கம் மற்றும் பண்டைய, மற்றும் நவீன மொழிகளில், எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்பானிஷ் மொழியில் அவர் கற்பதற்கும் பெரிதும் அக்கறை காட்டினர்.

ஆனால் டொமாஸியின் சொந்த உத்வேகம், இளம் வயதிலிருந்தே, இறைவனுடைய ராஜ்யத்தில் சிறியவராக இருக்கவும், இவ்வுலக அரசர்களுக்கு அல்லாது, பரலோக அரசிற்கு சேவை செய்ய விரும்பியது. ஆன்மீக வாழ்க்கைக்கு தனது பணிகளை பின்பற்ற தனது தந்தையின் சம்மதத்தைப் பெறும்வரை, அவர் தனது புனிதமான ஆசையை இதயத்தில் வளர்த்துக் கொண்டிருந்தார்.

இவ்வுலக வாழ்க்கை முறையை கைவிட்ட பின்னர், கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்த இயக்கமாகவும், மற்றும் எளிமையை வாழ்க்கை முறையாகக் கொண்ட உறுப்பினர்களைக்கொண்ட "தியேட்டின்" (Theatines)  அனுமதிக்கப்பட்டார். இச்சபை, புனிதர் "கஜெட்டனால்" (St. Cajetan of Tiene) நிறுவப்பட்டதாகும்.

கி.பி. 1665ம் ஆண்டு, மார்ச் மாதம், 24ம் தேதி, அவர் "தியேட்டின்" (Theatines) சேர்ந்தார். இறுதியாக, கி.பி. 1666ம் ஆண்டு, மார்ச் மாதம், 25ம் நாளன்று, "பலேர்மோ" (Palermo) நகரிலுள்ள உள்ள "தூய சூசையப்பர் தியேட்டின் இல்லத்தில்" (Theatine house of St. Joseph), தனது சத்திய பிரமாணங்களை மேற்கொண்டார்.

முதலில் மெசினாவிலும் (Messina), பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஃபெர்ராரா (Ferrara) மற்றும் மொடெனா (Modena) நகர்களில் ஆரம்பத்தில் தத்துவம் கற்ற டொமாஸி, ரோம் (Rome) மற்றும் பலேர்மோ (Palermo) நகர்களில் இறையியல் கற்றார். கி.பி. 1673ம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு பெருவிழா நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். கிரேக்க (Greek) மொழியைப் பற்றிய தமது பரந்த அறிவின் காரணமாக, அவர் எத்தியோபிக் (Ethiopic), அரபு (Arabic), சிரியாக் (Syriac), கல்தாயிக் (Chaldaic) மற்றும் எபிரேய (Hebrew) மொழிகளின் ஆய்வை ஒன்றிணைத்தார். இவர், தனது யூத (Jewish) ஆசிரியரான ரப்பியை (Rabbi) கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். இந்த வெவ்வேறு மொழிகளில் உள்ள திருப்பாடல்கள் புத்தகத்தைக் கொண்ட ஒரு தொகுதிகளிடமிருந்து, அவர்  திருப்பாடல்களின் தலைப்புகளை சேகரித்தார். அவர் வேதத்தையும் திருச்சபை தந்தையரையும் கற்பதில் தன்னை அர்ப்பணித்தார். தலைமை நூலகங்கள், காப்பகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களைத் தேடிய அவர், பண்டைய திருச்சபை ஒழுக்கத்தையும் வழிபாட்டு முறைகளையும் திரும்ப கண்டறிந்தார்.

சீர்திருத்த முயற்சிகளில், டோமாசியின் முயற்சிகள் புதியதை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, பழைய பாரம்பரியங்களை மீட்டெடுப்பதற்கும், பராமரிப்பதற்குமாக இயக்கப்பட்டன. அவர் எப்போதும் பிறரால் ஆதரிக்கப்படவில்லை. மாறாக, சில சமயங்களில் அவரது வைராக்கியத்திற்காக கண்டிக்கப்பட்டார். திருத்தந்தை பன்னிரெண்டாம் இன்னசென்ட் (Pope Innocent XII), அவரை ஆயர்கள் அல்லது மதகுருக்களின் பரிசோதனையாளராக நியமனம் செய்தார். திருத்தந்தை பதினோராம் கிளெமென்ட் (Pope Clement XI), அவரை "தியேட்டின்" (Theatine) சபையின் ஆலோசகராகவும், புனித சபையின் இறையியலாளராகவும், புனித சபையின் ஒழுங்குமுறைகள் மற்றும் பிற அலுவலகங்களைப் பற்றிய ஆலோசனைகளுக்காகவும், புனித சபை சடங்குகளின் ஆலோசகராகவும், புனித அலுவலகத்தின் தகுதிவாய்ந்தவராகவும் நியமித்தார். டொமாஸி, திருத்தந்தை பதினோராம் கிளெமென்ட் அவர்களின் ஒப்புரவாளருமாவார்.

டொமாஸி, தனது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயத்தில், ஏழைகளின் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தார். மேலும் கிரகோரியன் மந்திரத்தை (Gregorian chant) பயன்படுத்துவதற்கு சபையின் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். கி.பி. 1713ம் ஆண்டு, இவரது தூய்மையை பாராட்டிய அனைவரையும் துன்பத்திலாழ்த்தியபடி, டொமாஸி மரணமடைந்தார். குறிப்பாக, திருத்தந்தை பதவியை ஏற்பதற்கு முன்னர், டொமாஸியிடம் ஆலோசனை பெற்றிருந்த திருத்தந்தை பதினோராம் கிளமென்ட் (Pope Clement XI) துயருற்றார். அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.