ஆறாம் கணித ஜெபம்

முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!

பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.

முதல்: சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும்.

பதில்: கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவரியும்.

முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக.

பதில்: ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. அல்லேலூயா.  ஆமென்.

(செப்துவாஜெசிமா ஞாயிறிலிருந்து உயிர்ப்பு ஞாயிறு வரை அல்லேலூயாவுக்குப் பதிலாக: நித்திய மகிமைக்கு இராஜாவான ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது என்று சொல்லவும்.)

கீதம்

வரப்ரசாதத்தின் கர்த்தாவே! என் இனிய இரட்சகரே! 

மாசற்ற கன்னிகையிடமிருந்து அழியக் கூடிய எங்கள் மனுவுருவெடுத்த உமது திருமாம்சம் தெய்வீகமானது என்று நினைத்தருளும்.

ஓ மரியாயே! வரப்ரசாதங்கள் அனைத்திற்கும் மாதாவே! எம் இனத்தார்க்கு இரக்கத்தின் தாயாரே! பசாசின் வல்லமையிலிருந்து இப்பொழுது எங்களைப் பாதுகாத்தருளும்.  எங்கள் மரண நேரத்தில் எங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்.

ஓ ஆண்டவரே! எல்லா மகிமையும் உமக்கே உண்டாவதாக!  ஒரு கன்னிகையின் சுதனாய் அவதரித்தவர் சகலராலும் ஆராதிக்கப் படுவாராக. மேலும் அவர் பிதாவோடும், தேற்றுகிறவரோடும் சதாகாலமும் ஒரே ஸ்துதி புகழ்ச்சியைப் பெற்றுக் கொள்வாராக.  ஆமென்.