பூமியதிர்ச்சி வராதபடி ஜெபம்

(பூமியதிர்ச்சியைத் தடுக்க செய்யப்படும் பூசையில் “நற்கருணை உட்கொண்டபின் ஜெபம்.”) 

ஆண்டவரே! உம்முடைய பரம இரகசியங்களை உட்கொள்ளுகிற எங்களைக் காப்பாற்றியருளும். எங்கள் பாவங்களின் காரணமாக நடுநடுங்கக் காணும் பூமியைத் திடமாக்கியருளும். இந்தத் தண்டனைகள் உம்முடைய கோபத்தினால் வருகின்றன என்றும் உமது இரக்கத்தினால் அவை நின்று போகின்றன என்றும் மனிதர்கள் தங்கள் உள்ளங்களில் உணர்ந்து கொள்ளும் படியாக இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து வழியாகத் தந்தருளும். 

ஆமென்.