உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக மாதாவிடம் காணிக்கை ஜெபம்

மிகவும் பரிசுத்த கன்னிமரியாயே!  உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்க மிகுந்த தேற்றரவு மாதாவே! அடியேன் இதோ உமது திருப்பாதத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்தித்து ஒப்புக்கொடுக்கும் காணிக்கை என்னவென்றால், என் அநுதினக் கிரிகையினாலே நான் அடையக் கூடிய பூரண பேறுபலன்களையும் என் மரணத்துக்குப் பின் எனக்காக ஒப்புக்கொடுக் கும் செபதப பலன்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  மரித்த விசுவாசிகளின் ஆத்துமங் களின் நன்மைக்காகத் தேவரீர் சித்தம்போல் அவைகளைப் பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும்.  தற்காலத்திலும் பிற்கால நித்தியத்திலும் எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களையயல்லாம் சுயநல நாட்டமின்றி தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே முழுவதும் ஒப்படைத்து விடுகிறேன்.  உமது திருக்குமாரனாகிய ஆண்டவர் தமது கிருபை இரக்கத்துக்கு அல்லது நீதிக்கேற்றபடி உமது திருக்கரங்களின் வழியாய் அடியேனுக்கு நியமித்தனுப்பும் நன்மை துன்பங்களையயல்லாம் மனப்பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக் கொள்கிறேன். 

ஆமென்.