அர்ச். அந்தோனியாரைக் குறித்து பதின்மூன்று மன்றாட்டு

அற்புதங்கள் வேண்டுமானால் அர்ச். அந்தோனியாரிடம் போ.

1. நீர் சாவை அகற்றுகிறீர்.

வார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.

2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே! சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.

3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர்.

அர்ச். அந்தோனியாரே! எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.

4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர்.

அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி.

5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன.

அர்ச். அந்தோனியாரே! பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி.

6. நோயாளிகளைச் செளக்கியப்படுத்துகிறீர்.

அர்ச். அந்தோனியாரே!  நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி.

7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது.

அர்ச். அந்தோனியாரே!  பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும்.  ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.

8. நீர்  சிறைச்சாலையில்  அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே! சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும்.  பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி.

9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி.

10. நீர் காணாமற்போன சொத்தைத்  திரும்பக் கண்டடையச் செய்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே!  காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி.

11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன.

அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்க ளைத் தற்காத்து இரட்சியும். பர. அருள். திரி.

12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன.

அர்ச். அந்தோனியாரே!  தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி.

13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக.

அர்ச். அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

பிரார்த்திக்கக்கடவோம்

இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே!  நிர்மல பரிசுத்தத்தின் உப்பரிகையே! தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர்.  அர்ச். அந்தோனியாரே!  நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும்.

சர்வேசுரா சுவாமி!  தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது.

ஆமென்.