திவ்விய தஸ்நேவிஸ் மாதா நவ (ஒன்பது) மன்றாட்டுகள்

முதல் மன்றாட்டு

வானுலகவாசிகள் சிரசிற் புனைகின்ற தூய லீலியை நிகர்த்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தெய்வீகத்தின் ஆலயமே! பகலவனின் ஒளிபட பதுங்கியயாழிவது பனியின் சுபாவமாயிருக்கிற நீர் எஸ்கலின் மலைமேல் பனிபெய்யக்கூடாத உஷ்ண காலத்தில் நீர் உறைபனியைப் பெய்து ஆலயங்கட்ட இடத்தையும் அளவையும் காண் பித்து, சூரியனின் வெப்பத்தால் பனி உருகிப் போகாதிருக்கச்செய்து உமது மகத்துவம் வாய்ந்த வல்லபத்தைக் காண்பித்தீரே. அமலோற்பவியே, தேவன் அடியோர்களின் ஆத்துமத்திலும் தமது வரப்பிரசாதங்களைப் பெய்து, உமது காலால் தலை நொறுங்குண்டு ஓலமிட்டழுது கிடக்கும் பசாசின் தந்திரங்களால் அவ்வரப்பிரசாதங்கள் சிதறிப் போகாதிருக்கக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

இரண்டாம் மன்றாட்டு

மகா புதுமைக் களஞ்சியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! வரப்பிரசாதத்தின் கரை காணாத சமுத்திரமே! ஆகாயத்துலாவும் நட்சத்திரங்களைக் கிரீடமாகச் சூடிய இராக்கினியே! நீர் மலடியாயிருந்த பாக்கியவதியாகிய அர்ச்சியசிஷ்ட அன்னம்மாளின் உதிரத்தில் தெய்வ கிருபையால் நீர் ஜென்ம மாசணுகாது உற்பவித்து, “அமலோற்பவி” யயன்னும் நாம அலங்காரத்தினால் சர்வ லோகத்திலும் பிரகாசிக்கின்றீரே. மாதாவே! புதுமைக்கிருப்பிடமாகிய நீர் புண்ணியவாட்டி யாகிய அன்னம்மாளின் வயிற்றில் உற்பவித்ததை யயண்ணுகையில், சர்வேசுரன் உம்மைப் புதுமைக் கரசியயன்று காட்டும் பொருட்டாய்ச் செய்த மகா புதுமையயன்று எண்ணித் துதிக்கிறோம். நல்ல தாயாரே! சர்ப்ப வடிவங்கொண்ட பேயின் மாய்கைக்குள் அகப்பட்ட ஏவையின் மக்களென் னும் பாவிகளாகிய எங்களிடத்தில் மோட்ச பேரின்பத்திற்கு இன்றியமையாததான நன்மை கள் உற்பவிக்க கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

மூன்றாம் மன்றாட்டு

புண்ணியவான்கள் ஆசையோடணிந்து கொள்ளும் ஆபரண மாலையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தீர்க்கத்தரிசிகளுடைய இராக்கினியே! தேவலோகாதிபதியாகிய கடவுள் முக்காலத்திலும் கன்னித்துவங்குன்றாத உமது திருவுதரத்தில் அவதாரம் பண்ணும் போது நீர் அடைந்த ஞானசந்தோ­த்தை எடுத்துச் சொல்ல இலகு, சூட்சுமம், அட்சயம், பிரகாசமென்னும் நான்கு வரங்களால் நிறைந்த வானோர்களாலுங் கூடுமோ! நல்ல தாயாரே, அடியோர்களும் அப்பரலோக நாயகனை நற்கருணை வழியாய் எங்களுடைய இருதயத்திற் கொண்டு, பகையைச் செய்கின்ற பஞ்சேந்திரியங்களை அடக்கிச் சந்தோ´க்கக் கிருபை பாலித்தருளும். அருள்நிறை மந்திரம்

நான்காம் மன்றாட்டு

நீண்ட கோலைக் கொண்டு ஆட்டுமந்தை களை மேய்த்து வந்த தாசர்களாகிய மோயீசன், தாவீது என்பவர்களை செழிய கோலைத் தாங்கி பூலோகத்தை அரசாளச் செய்த சர்வ வல்லபரின் மகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! நீர் கற்பமடைந்ததையறியாத வாடாத பூங்கொடி தாங்கிய மாசற்ற உமது மணவாளன் கொண்ட சந்தேகத்தையறிந்து கடவுளை மன்றாடி கபிரியே லென்னும் வானவரால் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து மனோதைரியங் கொடுத்தருளினீரே. நல்ல தாயாரே! அடியோர்களும் சத்திய வேதத் தின் பரம இரகசியங்களில் சந்தேகங்கொண்டால் அவைகளைத் தேவ உதவியால் நிவர்த்தி செய்து மனோதைரியம் அடையக் கிருபை பாலித்தருளும். அருள்நிறை மந்திரம்

ஐந்தாம் மன்றாட்டு

பசாசுகளை எதிர்த்து தாக்கி அவைகளுடைய அடாத கர்வத்தை அடக்கி பாதாளலோகத்திற்கு விரட்டியோட்டுகிறவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! கருணையும் நன்மையும் நிறைந்த தூய மேகமே! நீர் சர்வலோக கர்த்தாவை மிருகங்கள் அடையும் குடிலிற்பெற்று, காய்ந்த புல்லணையிற் கிடத்தி, பனியால் வருந்தின மகா வருத்தத்தைத் தாழ்மையோடு பொறுத்திருந்தீரே, நல்ல தாயாரே! அடியோர்களும் சர்வேசுரனின் திருவுளத்திற்கமைந்து இந்த அநித்திய உலகத்தில் வரும் துன்பங்களைத் தாழ்மையோடு அனுசரிக் கக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஆறாம் மன்றாட்டு

வாசனை கமழுந்தேனைச் சொரிகின்ற பசிய நிறங்கொண்ட திரண்ட கனிகளைக் கொடுக்கும் திராட்சைக் கொடியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! எல்லாத் தலைமுறைகளும் பாக்கிய வதியயனப் புகழ்ந்து துதிக்கிற ஜெயராக்கினியே! சோதிட சாஸ்திர வல்லவர்களாகிய மூவரசர்கள் ஒன்றுகூடி நீர் பயந்தருளிய பாலகனான சுவாமி யையும் உம்மையும் பூலோக மோட்சமாகிய பெத்லேகேமின் சிறு குகையில் தரிசித்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய, இராஜ நமஸ்காரத்தைப் பெற்றருளினீரே, நல்ல தாயாரே! சேசுவின் மந்தையாடுகளாகிய எங்களை இம்மை யில் ஓநாய்களாகிய நஞ்சிலுங்கொடிய பதிதக் கூட்டங்கள் நாசம் செய்யாதபடி பாதுகாத்து, மறுமையில் நாங்கள் ஆறு லட்சணராகிய உமது திருக்குமாரனை வாழ்த்தி நமஸ்கரிக்க கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஏழாம் மன்றாட்டு

பெத்லேகமென்னும் திருத்தலத்தில் யாக்கோபு என்பவருக்குக் கடவுளால் காண்பிக்கப்பட்ட மோட்ச ஏணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! சர்வ வல்லபம் பொருந்திய கடவுளை திருவயிற்றில் பத்து மாதந்தாங்கிப் பெற்றெடுத்து, அத்திருக்குழந்தையாகிய எம்மானுவேல் என்னும் உலக இரட்சகரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தீரே. நல்ல தாயாரே, அடியோர் களும் அழிந்து போகும் பூலோக செல்வங்களின் மாய்கைகளினால் நாற்றச்சரீரத்தின் தொந்தரவு களினாலும் அலைக்கழிக்கப்படாது எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். களங்கமில்லாத கன்னிகையே! அடியோர்களுக்கு மோட்ச வீட்டில் சிறிது இடம் தருவித்துக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

எட்டாம் மன்றாட்டு

சுடர்விட்டெரிந்த தீக்குள்ளிருந்தும் சிறிதும் வேகாமல் ஜொலித்து நின்ற முட்செடியும், சுகந்த பரிமளம் மிகுந்த சந்தன விருட்சங்களால் நிறைந்த நந்தவனமுமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மகத்துவந்தங்கிய ஜெயசீலியே! நீர் கானா நகரின் மெய்விவாக விருந்தில் உமது திருச்சுதனை வேண்டிச்செய்த மகா புதுமையை சர்வலோகமும் அறியுமன்றோ. மனுக்குலத்தின் பாவத்தை நாசஞ்செய்ய வந்த நாயகி! மரியாயின் அடைக்கலத்தின் பேரில் நம்பிக்கை வைத்திருக் கும் எல்லாருக்கும் பரலோக கபாடம் திறக்கப்படு மென்று அர்ச்சியசிஷ்ட பெனவந்தூர் உரைத்த வாக்கியத்தையயண்ணி, உம்மை தேடிவரும் அடியோர்களுடைய அவசர நேரத்திலும் தனித்தீர்வை நாளிலும் உமது திருக்குமாரனை வேண்டி கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஒன்பதாம் மன்றாட்டு

மேகஞ்சூழ்ந்த எஸ்கலின் மலைத்தேவாலயத்தில் எழுந்தருளிப் பிரகாசிக்கின்ற தேவநாயகியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மாசில்லாத உமது திருமேனியில் ஆடையாகத் தரித்தருளிய சிவந்த கிரணங்களை வீசுஞ் சூரியனைக் கண்டு, மலர்ந்த, வாடாத, குளிர்ந்த தாமரை மலர்களாகிய உமது பாதங்களண்டை யில் இதோ அடியோர்கள் வந்து, அப்பாத தாமரையானது பொழியும் தேனாகிய கிருபையை வண்டுகளாகிய நாங்களடையும் பொருட்டாய், தயை செய்யுமென்று பேரொலியோடு வீழ்ந்து துதிக்கின்றோம். அம்மணி, மக்களுடைய அழுகுரலைக் கேட்டு மனமிரங்கி உதவி புரியாத மாதாவுமுண்டா! இல்லையே, ஓ! திரியேக கடவுளால் பரலோக இராக்கினியாகக் கிரீடம் சூட்டப்பட்ட மாதாவே! உமது அடைக்கலத்தைத் தேடி ஓடி வருபவர் எவ்வளவு பெரிய பாவியாயிருந்த போதிலும், உமது கிருபாகடாட் சம் அவரைப் புறக்கணித்துத் தள்ளினதில்லை யயனும் சத்தியத்தை சருவலோகமும் அறியுமே. பனிமயத் தாயே! உம்மைப் பாவிகளின் அடைக்கலமென்று திருச்சபை உரத்துச் சொல்லுவது அபத்தமாமோ! அமலோற்பவ நாயகியே, சம்மனசுக்களின் திரள்களுக்கு எல்லாம் மேலாக உமது திருக்குமாரனுடைய பாதத்தடியில், மோட்சராக்கினியாய் மகுடந் தாங்கி வீற்றிருக்கும் நீர், எங்களுக்காக உமது திருக்குமாரனிடத்தில் கேட்கும் வரங்களைக் கொடாமல் மறுத்துத் தடை சொல்லுவாரோ?  ஒருபோதும் இல்லை. ஓ! இரட்சணிய இருப்பிடமே! எங்கள் பாவங்களுக்குத் தண்டனையாக இவ்வுலகில்வரும் பஞ்சம், படை, கொள்ளை நோய், பெருவாரிக் காய்ச்சல் முதலிய பயங்கர மான தீமைகளை விலக்கிப் பாதுகாத்து இரட்சியும். ஆபத்திற்க்கு அபயமே! பசாசின் தந்திரத்தினால் திருச்சபையினின்று விலகிக் கெட்டுப் போன பதிதர், பிரிவினைக்காரர் மனந்திரும்பி மறுபடியும் திருச்சபையில் சேரத் தயை செய்யும். உலகத்தின் எத்திசையிலும் சத்திய வேதம் பரவச் செய்யும். அன்புள்ள அன்னையே! எங்கள் பேரிலும், எங்கள் குடும்பங்கள் பேரிலும், உறவினர் உபகாரிகள் பேரிலும், சத்திய வேத இராஜாக்களின் பேரிலும், திருச்சபையின் பேரிலும் கருணைக்கண் நோக்கியருளும், நல்ல தாயாரே! இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சர்வ வல்லமையுள்ள எங்களாண்டவரான சேசுக்கிறிஸ்துநாதரை வேண்டிக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஆமென்.