அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு நவநாள் மன்றாட்டு.

பொம்பே நாட்டுப் புதுமையுள்ள நாயகியின் ஒரு படம் / சுரூபத்துக்கு முன்பாக , கீழ்காணும் மன்றாட்டுகளும், ஜெபங்களும் , சிறு வேண்டுதலும் கூடிய இந்த நவநாள் ஜெபத்தை ஜெபிக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்கி பரிசுத்த பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்களுக்காக வேண்டிக்கொல்லுகிரவர்களுக்கும் பரிபூரண பலனையும் பரிசுத்த பிதா 13ஆம் சிங்கராயர் கட்டளையிட்டருளி இருக்கிறார்.

சுரூபம் / படத்தை தக்க இடத்தில் ஸ்தாபித்து உன் விசுவாசத்துக்கும் பக்தி பற்றுதலுக்கும் அடையாளமாக , கூடுமானால் ஒரு மெழுகுதிரி கொளுத்தி பக்தி வணக்கத்தோடு சொல்ல வேண்டியதாவது :

சர்வேசுரா , எனக்கு உதவியாக வாரும்! கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்! பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக! ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக!

ஆமென்.