குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
இறைவா, உமது வார்த்தையால் யாவும் புனிதமடைகின்றன. நீர் படைத்த இதன் (இவற்றின்) மீது உமது ✠ ஆசியைப் பொழிந்தருளும். உமது சட்டத்திற்கும் திருவுளத்திற்கும் ஏற்ப நன்றியுடன் இதை (இவற்றை)ப் பயன்படுத்துவோர் யாவரும் உமது திருப்பெயரைச் சொல்லி வேண்டுவதால், உமது அருளைப் பெற்று, உடல் நலமும் அன்ம பாதுகாப்பும் அடைவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)