தனித் தீர்வை!

தனித் தீர்வை பற்றிய நினைவு தரும் நடுக்கம்!

மனிதன் இறந்தவுடன், இறந்த இடத்திலேயே சேசுநாதர் அவனது ஆன்மாவுக்குத் தோன்றி, அவனது பாவ புண்ணியங்களின் அடிப்படை யில், மோட்சம் அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் அல்லது நரகத்திற்குச் செல்ல அவனைத் தனிப்பட்ட முறையில் தீர்ப்பிடுகிறார் என்பது கத்தோ லிக்க விசுவாசம். இதுவே தனித் தீர்வை எனப்படுகிறது. அர்ச்சியசிஷ்ட வர்களில் பெரும்பாலானோர் தங்கள் மரண நேரத்தையும், நீதிபரரான கடவுளுக்கு முன்பாகத் தாங்கள் தன்னந்தனியாக நிற்க நேரும் தனித் தீர்வையையும் பற்றி நினைத்த போதெல்லாம் நடுங்கினார்கள்.

அர்ச்சியசிஷ்டவராய் வாழ்ந்த அர்ச். அவெல்லினோ பிலவேந்திரர், இந்த நினைவு தம்மைத் தாக்கும்போதெல்லாம், ''ஆண்டவரே, மறு வுலகத்தில் எனக்கு என்ன நடக்குமோ? நான் இரட்சிக்கப்படுவேனா? அல்லது நரகத்திற்கு உள்ளாவேனா?" என்று மகா நடுக்கத்தோடு சொல்வது வழக்கம். அர்ச். லூயிஸ் பெர்ட்ராண்ட் இரவில் இந்த நினைவு வந்தவுடன், உறங்க முடியாமல் நடுங்கியபடி "ஆ! நித்திய கேட்டிற்கு நீ ஆளாக மாட்டாயென்று எப்படித் தெரியும்?' என்பார். ஸ்பெயின் நாட்டு அப்போஸ்தலராகிய வணக்கத்திற்குரிய அவிலா என்னும் குருவானவர் தமக்கு சாவு சமீபித்திருப் பதாக அறிந்தவுடன் இந்த பயத்தினாலேயே "ஆ! என் ஆண்டவரே, நான் மரணத்திற்கு நன்றாய் ஆயத்தம் செய்ய இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்தால் நலமாயிருக்குமே!" என்று கூக்குரலிட்டார்.

மடாதிபதியான அகாத்தோ அநேக வருடங்களைத் தவ வாழ்வில் கழித்த பின்பும், தமது மரண நேரத்தில் "ஆ எனக்கு என்ன நடக்குமோ? சர்வேசுரனுடைய தீர்வையை யார் அறியக்கூடும்?" என்று கூறக் காரணமாக இருந்தது இந்த பயம்தான். அர்ச். அர்சேனியும், மரண நேரத்தில் அஞ்சி நடுங்கினார். அவரது சீடர்கள் அவரிடம் இப்படி அவர் பயப்பட காரணமென்ன என்று கேட்க, "இந்தப் பயம் எனக்கிருப்பது இன்றல்ல, என் வாழ்நாள் முழுதுமே எனக்கிருந்து வந்தது" என்றார்.

இவர்களை விட இன்னும் அதிகமாய் பரிசுத்த யோபு நடுங்கினார். "கர்த்தர் என்னை நடுத்தீர்க்க வரும்போது என்ன செய்வேன்? அவர் பரிசோதிக்கும்போது என்ன பதில் சொல்வேன்?' என்றார் (யோபு 31:14). அர்ச்.

கடைசி வரை கெட்ட வழியில் வாழ்பவன் நல்ல முடிவை அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நான் அனுபவத்தால் அறிந்து நிச்சயமாய் நம்புகிறேன்'' என்கிறார். "மரண நேரம் வரும் வரை பாவத்தில் ஜீவித்த நூறாயிரம் பேர்களுக்குள் மரணத் தறுவாயில் ஒருவன் முதலாய் தேவ இரக்கத்தை அடைந்து கொள்வது அரிது" என்று அர்ச். எரோனிமும் சொல்கிறார். செத்தவனை உயிர்ப்பிப்பதை விடவும் எப்பொழுதும் பாவப் பழக்கத்தில் ஜீவிப்பவர்களின் வாழ்வு நல்ல விதமாய் முடிவது பெரிய புதுமை என்று அர்ச். வின்சென்ட்ஃபெரர் சொல்கிறார்.

இவர்கள் பெரும் அர்ச்சியசிஷ்டவர்கள், தங்கள் ஆத்துமமாகிய ஆடையைக் கிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டது மட்டுமின்றி, அவரது மகிழ்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்கள்; ஏராளமான ஆன்மாக்களை மீட்டுத் தங்கள் ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள்; வாழ்நாள் முழுவதும் கண்ணுங் கருத்துமாய்ப் பாவங்களை விலக்கியவர்கள்; ஒவ்வொரு இரவிலும் தங்கள் ஆத்துமத்தைத் தங்கள் எதிரில் நிறுத்தி, அதன் குற்றங்குறைகளை ஆராய்ந்து கடுமையாகத் தீர்ப்பிட்டவர்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, சேசுநாதரைத் தங்கள் உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள். இவர்களே தங்கள் மரண நேரத்தையும், தனித் தீர்வையையும் நினைத்து நடுங்கினார்கள் என்றால், நாம் எந்த அளவுக்கு இது பற்றி அஞ்சி நடுங்க வேண்டும்!

''அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்!'' என்று அப்போஸ்தலர் எச்சரிக் கிறார் (பிலி 2:12). ''நீதிமானே இரட்சணியமடைவது அரிதானால், தேவ துரோகிக்கும் பாவிக்கும் இடம் எங்கே?" என்று அர்ச். இராயப்பர் நம்மை வினவுகிறார் (1 இரா. 4:18).

உண்மை இப்படியிருக்க, கணக்கற்ற பெரும் பாவங்களைக் கட்டிக்கொண்ட அற்ப மனிதன் நடுங்காதிருப்பானா? இனி வீணாக்குவதற்கு நேரமில்லை! ஆத்துமம் இரட்சிக்கப்படுவது முக்கியம். நேரமிருக்கும்போதே பாவி தன் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். சாவான பாவம் கண்ணியையும், வலையையும் போல் எதிர்பாராத நேரத்தில் அவனைச் சிக்க வைக்காதபடி அவன் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

அவன் தன்னை முழுவதும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இனியாவது தன் மரண நேரத்தில் தனக்கு மன வேதனை தராமல் ஆறுதல் தரக்கூடிய முறையில் அவன் வாழத் தொடங்க வேண்டும்; அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும்; ஆபத்தான பாவ சமயங்களை விட்டுவிலக வேண்டும் கடவுளுக்கு சித்தமானால் உலகத்தையுமே துறந்துவிட வேண்டும். உனது நித்திய இரட்சணியத்தை நிச்சயப்படுத்த வழி தேடு. இப்படி இதை நிச்சயப்படுத்துவதற்காக, நீ எவ்வித பரித்தியாகம் செய்தாலும், எதெதை விலக்கினாலும் அது அதிகமென்று சற்றும் எண்ணாதே.

"நிர்ப்பாக்கிய மனிதா! பரமபிதா காலத்தையெல்லாம் உன் கையில் அடக்கி வைத்தது போல் ஏன் எதிர்காலத்தை நினைத்தபடி வாழ்கிறாய்?" என்று அர்ச். பெர்னார்ட் கேட்கிறார். ''உன்கையில் ஒரு மணி நேரம் இல்லாதிருக்க, ஒரு நாள் உயிரோடிருப்பதாக எப்படிக் கணக்கிட்டுக் கொள்கிறாய்?'' என்று அர்ச். அகுஸ்தீன் கேட்கிறார். ஆம், இன்னும் ஒரு மணி நேரம் உன் ஜீவிய காலம் நீடித்திருக்கும் என்பதே நிச்சயமில்லாதிருக்க, நாளைக்கும் நான் இருப்பேன் என்று எப்படி நிச்சயமாய் எண்ணு கிறாய்? இன்று நீ மரிக்க ஆயத்தமாயிராவிட்டால், உன் மரணம் துர்மரணமாயிருக்கக் கூடுமென்று அஞ்சக்கடவாய்" என்று அர்ச். தெரேசம்மாள் தீர்மானமாய் சொல்லியிருக்கிறாள்.

இதுவே மனித வாழ்விலெல்லாம் அதிமிக முக்கியத்துவம் உள்ள அலுவல் ஆகும். ஏனெனில், அது ஆத்தும் காரியம். அது போனால் எல்லாம் போய்விடும். ''நம் ஆத்தி மற்றெல்லாப் பொருட்களையும் விட மிக விலையேறப்பெற்றது'' என்கிறார் அர்ச். கிறீசோஸ்தோம். இந்தச் சத்தியத்தைக் கண்டறிவதற்கு சர்வேசுரன் தாமே நமது ஆத்துமங்களை இரட்சிப்பதற்காக தமது திருச்சுதனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததை நாம் அறிவதே போதுமானது.

நித்திய வார்த்தையானவர் தமது இரத்தத்தைச் சிந்தி அந்த ஆத்துமங்களை மீட்பதற்குப் பின்வாங்கவில்லை. ''பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் நீங்கள் (1 கொரி. 6). எனவே கடவுளின் விலைதான் மனிதனின் விலையாகவும் இருக்கிறது என்று திருச்சபைத் தந்தை ஒருவர் கூறுகிறார். மனிதனின் இரட்சணியம் மகத்தான விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பதால், அவனது விலை சர்வேசுரனின் விலைக்குச் சமமானதென்று எண்ண வாய்ப்பளிக்கிறது. ஆத்துமமானது இவ்வளவு பெரிய விலை பெறுமானால் உலகத்திலுள்ள எந்தப் பொருளை ஈடாகப் பெற்றுக் கொண்டு அதை இழக்கக் கூடும்?

தன் ஆத்துமத்தை இழந்து போக நேரிடலாம் என்று அஞ்சி நடுங்காதவன் இரட்சிக்கப்பட மாட்டான். ஆகையால் நாம் கஷ்டப்பட்டு, நமக்குப் பலவந்தம் செய்தால்தான் நாம் இரட்சணிய மடைவோம். பரலோக இராச்சியம் பலவந்தப்படுகிறது. பலவந்தம் செய்வோரே அதைப் பறித்துக் கொள்கிறார்கள் (மத். 11:12). "இரட்சணியமடைய வேண்டுமானால் நமது மரணத் தறுவாயில், நமது வாழ்வு நமது கர்த்தராகிய சேசுக்கிறிஸ்துநாதருடைய வாழ்விற்கு ஒத்ததாயிருக்க வேண்டும்.

''இரட்சிக்கப்படக் குறிப்பிட்டவர்களை அவர் தமது திருச்சுதனின் சாயலுக்கு ஒத்தவர்களாக்கினார் (உரோ 8:29). ஆதலால், ஒரு புறத்தில் சகல பாவச் சமயங்களையும் நாம் நீக்க வேண்டும். மறுபுறத்தில், இரட்சணியம் அடைவதற்கேற்ற வழிகளையெல்லாம் உபயோகிக்கவும் வேண்டும். அர்ச். பெர்னார்து சொல்கிறபடி பரலோக இராச்சியம் சோம்பேறிகளுக்குக் கொடுக்கப்படாது.