நரகம் தவிர்க்க.. பதிவு -5 :

“ நரகத்தில் விழும் ஆன்மாக்களின் எண்ணிக்கை “ – தொடர்ச்சி

தெறிந்துகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சிறியது. அது எவ்வளவு சிறியது என்று அறிந்தால், நாம் துக்கத்தால் மயங்கி விடுவோம்.  தெறிந்து கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு சிறியது என்றால், கடவுள் அவர்களை ஒன்று கூட்டுவதாக இருந்தால் பழைய ஏற்பாட்டில் தான் செய்தது போல, தீர்க்கதரிசியின் வாய்பொழியாக, “ ஒருவர் பின் ஒருவராக- இந்த மாகாணத்திலிருந்து ஒருவரும், அந்த இராட்சியத்திலிருந்து ஒருவருமாக, ஒன்று கூடுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லுவார்” என்கிறார். அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட்

தொலைக்காட்சி, வலைத்தளம் என்ற பயங்கரமான பாவ சோதனைகள் இல்லாதிருந்த காலத்தின் நிலை இது. இன்று பாவத்தில் தாங்கள் பிடிவாதமாக நிலைத்திருந்தும், முன் ஒருபோதும் இருந்திராத மிகக் கேடான விஞ்ஞான, தொழில் நுட்ப, பொறியியல் வளர்ச்சியால் விளைகிற பெரும் சோதனைகளுக்கு மத்தியில் எவ்வித கவலையுமின்றி வாழும் மனிதர்கள், தாங்கள் எளிதாக மோட்சத்தை அடைய முடியும் என்று எப்படி நம்புகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த உண்மைகள் உங்களுக்கு தரப்படுவது அவ நம்பிக்கைக்குள் உங்களை வீசியெறிவதற்காக அல்ல. மாறாக எப்போதும் தேவஇஷ்டப்பிரசாத நிலையில் உங்கள் ஆன்மாவைக் காத்துக் கொள்ளவும், மரணம் என்பது எப்போது வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தயாராயிருக்கவும் உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யும்படி உங்களை எச்சரிப்பதற்காகவே இவை உங்களுக்குத் தரப்படுகின்றன. நரகத்தைப் பற்றிய பயம் நலம் பயக்கும் பயமே என்பதில் சந்தேகமில்லை.

“ ஆகவே, ஆண்டவர் பூமிக்குத் திரும்பி வரும்போது அவர் காணக்கூடிய, இன்னும் உயிரோடு இருக்கிற மெய்யான பரிசுத்த வேதம் உங்களில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்து, உங்கள் பக்தியார்வத்தை வளர்த்துக் கொள்ளும்படியாக உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நாம் மனதாலும், நோக்கத்தாலும் நம் சிருஷ்டிகரின் மட்டில் நாம் கொண்டுள்ள உண்மையான நேசத்தால் இரட்சிக்கப்படுகிறோம். 

நம் ஆண்டவருக்கு எதிரான தாக்குதலில், தலமைக்குருக்களும், சட்ட வல்லுநர்களும், மூப்பர்களும் எப்படி சதித்திட்டம் தீட்டினார்கள் என்பதையும், எவ்வளவு குறைந்த எண்ணிகையிலான மக்கள் நிஜமாகவே தேவ வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் சிந்தியுங்கள். இரட்சிக்கப்படுபவர்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே காற்றினால் அழைக்கழிக்கப்படும் கடல் நீர்த்திரளைப் போல, அங்குமிங்குமாக சிதற்டிக்கப்படுகிற பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு அச்சமடையாதீர்கள்.

சோதோமின் லோத்தைப் போல, ஒருவன் மட்டுமே இரட்சிக்கப்படுவதாயிருந்தாலும், அவனும் கூட கிறிஸ்து நாதரில் அசையாத நம்பிக்கை கொண்டு, கடவுளின் சரியான நீதியின்படி வாழ வேண்டியவனாக இருக்கிறான். ஏனெனில் ஆண்டவர் தமது பரிசுத்தர்களைக் கைவிட மாட்டார் என்று திருச்சபையின் வேதபாரகரும், திருச்சபைத் தந்தையுமான அர்ச். பேசில் அறிவுருத்துகிறார்.

நமக்குத்தான் மோட்சம் தேவை! அதனால் நமக்குத்தான் அக்கரை வேண்டும்!.

“ ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே…. அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள் “ பிலிப்.2:12.

நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !