கத்தோலிக்க குருக்கள் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை?

1. குடும்ப காரியங்கள் ஊழியத்திற்குத் தடையாக இருக்கும் என்பதால் .

2. உலகப்பிரகாரமான காரியங்கள் ஊழிய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்.

3. இயேசு, தானே திருமணம் செய்து கொள்ளாதவர் என்பதால். இயேசுவுக்கு மனைவியும்  மக்களும் இருந்தனர் என்று கட்டுக்கதைகள் உலவுகின்றன . இத்தகைய கதைகளை எழுதிக் கொண்டு பணமும் சம்பாதித்துக் கொண்டும் இருக்கின்றனர் . ஆனால், உண்மை என்னவெனில் இயேசுக்கிறிஸ்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே!

4. குருக்கள் பரலோகத்தை அடையாளப்படுத்துகின்றனர் . அங்கே பெண் கொடுப்பதும் இல்லை எடுப்பதும் இல்லை. . குருக்கள்  வெண் அங்கியை அணிவதும் அதனால் தான் .

5. பரலோகத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அதை மண்ணுலகில் குருக்கள் பிரதிபலிக்கின்றனர்.