அர்ச். சலேத் மாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும் - மற்றதும்...

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீதிமான்களுக்கு உறுதியாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவான சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களுக்குச் சுகிர்த புத்திமதிகளைச் சொல்லத் தக்கதாக மோட்சத்திலிருந்து இறங்கி இரண்டு ஏழைப் பிள்ளைகளுக்குத் தரிசனையான சலேத் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நாங்கள் பாவ வழியைவிட்டு மனந்திரும்பத் தக்கதாக எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனுஷர் செய்கிற பாவங்களைப் பற்றித் திரளான கண்ணீரைச் சொரிந்த சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளான எங்கள் பேரில் கோபமா யிருக்கிற சர்வேசுரனுடைய கோபாக்கினையை உம்முடைய மன்றாட்டால் நிறுத்துகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

"நம்முடைய ஜனங்களான கிறிஸ்துவர்கள் மனந் திரும்பாதே போனால் நமது திவ்விய குமாரனுடைய திருக்கையானது அவர்களைத் தண்டிக்கவிட வேண்டிய தாய் இருக்கும்" என்று திருவுளம் பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களுடைய பாவங்களைப் பற்றி அதிக வருத்தமும் பிரயாசமும் படுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சலேத் மலையில் இரண்டு சிறு பிள்ளைகளுக்குப் புத்திமதிகளைச் சொன்ன பிற்பாடு, இதெல்லாவற்றையும் சகல சனங்களுக்கும் அறிவியுங்கள் என்று திருவுளம் பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனுஷர் மனம் திரும்பாதே போனால் அவர் களுக்கு மிகவும் பயங்கரமான தண்டனைகள் நேரிடும் என்று திருவுளம் பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர்கள் மனம் திரும்பாதே போனால் வெள்ளாண்மை கெட்டுக் கடின பஞ்சம் வருமென்று முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர்கள் மனம் திரும்பாதே போனால் உருளைக்கிழங்குகளும், முந்திரிகைக் குலைகளும், கோதுமை முதலான விளைவுகளும் அழிந்து போய் ஜனங்களுக்கு மிகுந்த வருத்தமுண்டாகுமென்று அறிவித்த சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர்கள் மனம் திரும்பாதே போனால் ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நடுக்கமெடுத்து சாவார்கள் என்று முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர்கள் மனம் திரும்பினால் சர்வேசுரனுடைய கோபம் மாறி வெள்ளாண்மை சரியாய் விளைந்து பஞ்சம் நீங்கி எங்கும் சவுக்கியமும் செழிப்பும் உண்டாகும் என்று திருவுளம் பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சலேத் மலையில் தேவரீர் சொன்ன சுகிர்த புத்திகளினால் அநேகம் பாவிகளை மனந்திருப்பின் சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனுஷருடைய ஆங்காரம் அடங்காததைப் பற்றித் தேவரீர் முன் அறிவித்த பொல்லாப்புகள் எங்களுக்குச் சம்பவித்ததினால் எங்கும் பேர்போன சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சலேத் மலையில் தேவரீர் காண்பித்த அற்புதமானது பூலோகத்தின் எத்திசையிலும் பிரபலியமானதினாலே பேர்பெற்ற சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சலேத் மாதா என்கிற பேராலே கூப்பிடப்பட்டு எண்ணிக்கைக்குள் அடங்காத புதுமைகளைச் செய்கிற சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சலேத் மாதாவின் பேராலே கட்டுவித்த நானூற்றுக்கு மேலான கோயில்களில் வணங்கப்படுகிற சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவரீருடைய உபகார சகாயங்களினால் நானாவித சனங்களை உம்மிடத்தில் வரப்பண்ணுகிற சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எத்திசையிலும் மேன்மேலும் அதிகமதிகமாய்த் துதிக்கப்படுகிற சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவரீரை மன்றாடுகிறவர்களில் ஒருவரையும் வியர்த்தமாய்ப் போக விடாத சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவரீர் திருப்பாதம் வைத்த இடத்தில் தண்ணீரூற்று அற்புதமாய்ப் புறப்படப்பண்ணின் சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்தப் புதுமையான ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு கணக்கில்லாத அற்புதங்களை செய்விக்கிற சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குருடருக்குப் பார்வையும் செவிடருக்கு செவியும் சப்பாணிகளுக்கு நடையும் மற்ற வியாதியஸ்தவருக்கு ஆரோக்கியமும் கட்டளையிடுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எவ்வித துன்பக் கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும் தேற்றரவையும் கொடுக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சூரியனை மங்கச் செய்யும் சோதிப் பிரகாசத் தோடு சலேத் மலையில் காண்பித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ரோஜாப்பூ முடியும் நட்சத்திர கிரீடமும் காந்தியுள்ள மற்றச் சோடிப்புகளும் அணியப்பட்டுத் தரிசனையான சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுகிறீஸ்துநாதர் பாடுபட்ட திருச்சிலுவையும், குறடு சுத்தியலும் மார்பில் அணியாக வைக்கப்பட்டுக் காண்பித்த சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய நாளான ஞாயிற்றுக் கிழமையை நாங்கள் அனுசரியாதே போனால், எங்களுக்கு கடின ஆக்கினை நேரிடும் என்று முன் அறிவித்த சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞாயிற்றுக்கிழமையை அநுசரியாத பாவமும் தேவதூஷணம் சொல்லுகிற பாவமும், இவ் விரண்டு பாவங்களும் விசேஷமாய்த் தேவகோபத்தை மூட்டுகிறதென்று முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுத்தபோசனக் கடனும். ஒரு சந்திக் கடனும் சரியாய் அனுசரிக்க வேண்டுமென்று கட்டளையிட்ட சலேத் மாதாவே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இராச் செபமும், காலைச் செபமும் தப்பாமல் செபிக்க வேண்டுமென்று கற்பித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளான எங்களுக்குத் தாயும் அடைக்கலமும் நம்பிக்கையும் ஆதரவுமாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயாபரியாயிருந்து, - எங்களைத் தயாரித்துக் கொள்ளும் மாதாவே,

தயாபரியாயிருந்து, - எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் மாதாவே,

எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை உமது வல்லபமுள்ள மன்றாட்டுகளினால் அகற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

பஞ்சம் படை பெருவாரிக் காய்ச்சல் முதலான ஆக்கினைகளிலிருந்து எங்களை இரட்சிக்க வேண்டும் மென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

வெள்ளாண்மைப் பயிர் விளைவுகள் சரியாய் விளைந்து எங்களுக்கு செழிப்பும் சவுக்கியமும் வரப்பண்ண வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

சகலமான கிறிஸ்தவர்கள் தேவ ஆக்கினைக்குப் பயந்து சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபை யினுடைய கட்டளைகளையும் சமுத்திரையாய் அநுசரிக்கப் பண்ண வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

சத்திய வேதம் எத்திசையிலும் பரவவும் திருச்சபை எங்கும் ஸ்தாபிக்கப்படவும் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

ஓ மாதாவே! எங்களுடைய சந்தோஷத்தில் திருப்தியும், கஸ்திகளில் ஆறுதலும், புண்ணியங்களில் உறுதியும், எந்தக் கிரியைகளிலும் துணையாயிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

எங்கள் மரணத்தருவாயில் எங்களை கைவிடாமல் நல்ல பாவசங்கீர்த்தனமும், அவஸ்தைப்பூசுதலும், கடைசி நன்மையும் இஷ்டப்பிரசாதமும் கட்டளையிட வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே,

உலகத்தின் பாவங்களைப் - மற்றதும்...

சேசுக்கிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக. பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற அர்ச். சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிராத்திக்கக்கடவோம்

சர்வசீவ தயாபர சேசுவே! பாவிகளாயிருக்கிற அடியோர்களை மீட்டு இரட்சிக்கத்தக்கதாக உம்முடைய பரிசுத்த தாயாரான தேவமாதாவைக் கொண்டு உம்முடைய நீதிக் கோபத்தினால் எங்களுக்கு வரப்போகிற ஆக்கினைகளைச் சலேத் மலையிலே முன் அறிவிக்கச் சித்தமானீரே, நாங்கள் எல்லோரும் தக்க பயபக்தியோடு அஞ்சிப் பாவ வழிகளைவிட்டு மனந்திரும்பி உம்முடைய கற்பனைகளையும் திருச்சபையினுடைய கட்டளைகளையும் சுமுத்திரையாய் அனுசரிக்க அனுக்கிரகம் பண்ணியருளும். எங்களுடைய பாவங்களின் நிமித்தமாக எங்களுக்கு நேரிட்ட பொல்லாப்புகளை நீக்கி வரப்போகிற ஆக்கினைகளை அகற்றி வேண்டிய நன்மைகளைத் தந்து சந்தோஷமான மனதோடு நாங்கள் உமக்கு இவ்வுலகத்தில் ஊழியம் பண்ணவும், மறு லோகத்தில் உம்மோடு கூட என்றைக்கும் வாழவும் செய்ய வேண்டுமென்று பிரார்த் தித்துக் கொள்ளுகிறோம். பிதாவோடேயும் இஸ்பிரீத்து சாந்துவோடேயும் ஒன்றாயிருந்து சதா காலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்து கொண்டு வருகிறவருமா யிருக்கிற ஆண்டவரே, - ஆமென்.

(சலேத் மாதாவைக் குறித்து 3 பர. அருள். திரி. மந்திரமும் வேண்டிக் கொள்ளவும்).