அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாவீது ராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவதாயாரின் பத்தாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ குமாரனை வளர்த்த தகப்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துநாதரை உற்சாகப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம தைரியசாலியான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரத்தின் அன்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர்களின் காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பங்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரிக்கிறவர்களுக்குப் பாதுகாவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களை நடுநடுங்கச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார். அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக்கெட் டாத பராமரிக்கையினால் தெரிந்து கொள்ளத் திருவுளமானீரே.  பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிற வராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற ஆண்டவரே. 

ஆமென்.

திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே!  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (100 நாட் பலன்.)