அர்ச். சூசையப்பர் நவநாள் - 4 ம் ஜெபம்

ஓ! யூதேயா நாட்டை ஆண்ட கீர்த்திப் பிரதாபமுள்ள இராஜாக்களின் குலத்தில் உதித் தவரே, பிதாப்பிதாக்களின் சற்குணத்தின் சுதந்தர வாளரே, உத்தம பாக்கியவானாகிற அர்ச். சூசை யப்பரே! அடியேனுடைய மன்றாட்டைக் காது கொடுத்துக் கேட்டருளும். சேசுநாதருக்கும் அர்ச். மரியம்மாளுக்கும் பிற்பாடு, என் அத்தியந்த வணக்கத்துக்கும் முழு விசுவாசத்திற்கும் காரண ரும் உன்னத பாதுகாவலுமாயிருப்பவரே! நீர் சிறந்த அர்ச்சியசிஷ்டவராயிருக்கிறீரே. தாழ்மை யில் சர்வேசுரனுக்கு மிகுந்த தூய்மையோடும், முழு ஆசையோடும் தொண்டு செய்து வருவோ ருக்கு நன்மாதிரிகையாக, அந்தரங்கத்தில் விளங்கி நின்ற மகா அர்ச்சியசிஷ்டவரே, உமது பேரில் விசுவாசம் கொண்ட பக்திமான்களோடு நானும் ஒருவனாக உமக்குப் பணிவிடை புரிய என்னை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். பிள்ளை யைப் போல உமக்கு நான் கீழ்ப்படியவும், உம்மை சிநேகிக்கவும் அநுக்கிரகம் செய்தருளும். நீர் என் பிதாவும், நான் உமது பிள்ளையும் ஆகையால், பிள்ளையாகிய நான் பிதாவாகிய உமக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தையும், உமது பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையையும், அன்பையும் நான் அடையச் செய்தருளும். திருச்சபைக்கு உட்பட்ட கிறீஸ்தவர்களுக்காகப் பரிந்துபேசும் வல்லமை பொருந்திய நியாய தூதுவரே, நீர் சர்வேசுரனிடம் அடியோர்களுக்காகப் பேசின மனு வீண் போனதில்லையயன்று அர்ச். தெரேசம் மாள் உறுதியாய் சொல்லியிருக்கிறாரே! ஆகை யால் அடியேன் இப்பொழுது உமக்குச் செலுத்தும் இந்த வேண்டுதல் மூலம் என் மனுவை அடைய எனக்காக ஆண்டவரிடம் மன்றாடியருளும். ஓ சிறந்த அர்ச்சியசிஷ்டவரே! நித்திய சமாதானத் தோடு நான் சம்பந்தப்பட்ட அர்ச். திரித்துவத் துக்கு என்னை ஒப்புக்கொடுத்தருளும். ஆண்டவ ரின்  பரிசுத்த சாயலாய்ப் படைக்கப்பட்ட நான் பாவக்கறையால் அசுத்தப்படுத்திக்கொள்ள விடா தேயும். என் திவ்ய இரட்சகர் தமது அன்பின் சுவாலையை என் இருதயத்திலும் சகல விசுவாசி களின் இருதயங்களிலும் பற்றியயரியச் செய்ய அவரிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். திவ்ய சேசு குழந்தையாய் இருந்தபோது கொண் டிருந்த பரிசுத்த தன்மையையும் தாழ்ச்சியையும் நாங்கள் எங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்ளச் சுவாமியை மன்றாடியருளும். உமது பரிசுத்த மணவாளியாகிய முப்பொழுதும் கன்னித் தாயின் பேரில் நான் வைத்திருக்கும் விசுவாசம் அதிகரிக் கக் கட்டளையிட்டருளும். நீர் இறக்கும்போது சர்வேசுரனிடம் பெற்ற பாக்கியத்தைப் பார்த்து இரட்சகருடையவும், தேவமாதாவினுடையவும் பாதுகாவலில் நான் உயிர்விடச் செய்து, என் ஜீவியத்திலும் மரணத்திலும் என்னைப் பாதுகாத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.