அர்ச். சூசையப்பர் நவநாள் - 3 ம் ஜெபம்

நல்ல மரணத்தைக் கொடுக்கிற வரமுள்ள அர்ச். சூசையப்பரே! நான் செய்த பாவத்தால் எனக்கு ஆகாத சாவு வருவதற்குப் பாத்திரவானா யிருந்தாலும், உமது பேரில் நான் வைத்த நம்பிக் கையின் காரணமாக தேவரீர் சர்வேசுரனை இரந்து எனக்கு நல்ல மரணத்தைக் கட்டளையிடுவீர் என்று நம்பியிருக்கிறேன். இப்படிப்பட்ட பாக் கியமான மரணத்தை நான் அடையத்தக்கதாக நீர் அனுபவிக்கிற வாக்குக்கெட்டாத மோட்ச பாக் கியத்தைக் குறித்து உம்மை மன்றாடுகிறேன். தேவ வரங்களால் நிறைந்த அர்ச். சூசையப்பரே வாழ்க! கர்த்தராலும் கர்த்தருடைய திருத்தாயாராலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருக் கன்னிப் பத்தினியின் கனியாகிய சேசு ஆசீர்வதிக் கப்பட்டவருமாமே. கடவுளுடைய தாயாரின் பரிசுத்த பத்தாவான அர்ச். சூசையப்பரே, உம்  ஊழியரும், பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக் காக வேண்டிக்கொள்ளும். சேசுகிறீஸ்துநாத ருடையவும், கன்னிமரியம்மாளுடையவும் திருக் கரங்களில் பாக்கியமான மரணத்தை அடைந்தவர் நீரே.  எங்களுக்கு  இப்போதும்  எங்கள்  மரண நேரத்திலும் ஒத்தாசையாயிரும். அருளினாலே பூரண சூசையப்பரே வாழ்க. சேசு மரியாயும் உம்முடனே. ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட் டவரும் நீரே! உமது பத்தினியின் திருவயிற்றின் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச். சூசையப்பரே, அர்ச். தேவமாதாவின் துணைவரே, சேசுநாதரைப் போ´த்தவரே, உமது பேரில் பக்தியாயுள்ளவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களால் பூரண சூசை யப்பரே வாழ்க, அர்ச். தேவமாதாவுக்குப் பிள்ளை யான சேசுநாதர் அனந்த கிருபையோடு உமக்குப் பிள்ளையாக வந்ததால் தேவதாயார் பெண் களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டது போல, நீரும் ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே. கிறீஸ்து வின் பிதாவென்னும் பெயர் படைத்த அர்ச்.  சூசையப்பரே! அர்ச். தேவமாதாவுக்குப் பரிசுத்த பத்தாவே, இந்த உலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்த சேசுநாதர் பாவிகளாயிருக்கிற எங்களுக்கு இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் கிருபை செய்யும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.