கிறிஸ்துவின் வருகையாகிய அற்வேந்த் என்னும் ஞாயிறு

சர்வ வல்லமையுள்ள கடவுளே! உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கச் சிறந்த மகத்துவத்தோடே திரும்பி வரும் கடைசி நாளிலே, நாங்கள் உயிர்த்தெழுந்து, நித்தியசீவனைப் பெறும்படியாக அவர் மிகுந்த தாழ்மையோடு எங்களைச் சந்திக்க வந்த சாவுக்கினமன இந்தச் சீவகாலத்தில், நாங்கள் அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளி விட்டு ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக் கிருபைசெய்ய வேண்டுமென்று உம்மோடும், பரிசுத்த ஆவியோடும், இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஆமென்.