பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறிஸ்துவினுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகம் போற்றிடும் புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புதுமையால் பிரகாசித்து வரும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அண்டி வந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைத் தேடி வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துன்பம் விலக ஆசிக்கும்  பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துயரப்படுவோருக்குத் தேற்றரவாய் இருக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எதிர்பார்க்கும் நன்மைகைளைப் பெறச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பம் விளங்க ஆசிக்கும்  பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பம் ஒற்றுமையாயிருக்க ஆசிக்கும்  பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பத்தில் சமாதானத்தை நிறுவும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதியஸ்தர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊமையைப் பேச வைக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இருதய நோயைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சித்தபேதத்தைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பார்வை இழந்தோருக்குப் பார்வை அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பைத்தியத்தைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊனமான கை கால்களை வழங்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிடைக்காத பொருளைக் கிடைக்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காணாத பொருளைக் கண்டடையச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதவி உயர்வு கிடைக்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் வரமளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நம்பியவர்களுக்கு நல்ல உபகாரியாய் இருக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறுபிள்ளைகளுக்கு ஞான விளக்காய்ப் பிரகாசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்புக்குக் களங்கம் வராமல் காத்திடும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவத்திலிருந்து விலக்கிக் காத்திடும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துஷ்டர்களை மனந்திருப்பும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துன்மார்க்கரை நல்வழிபடுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பேய்ப் பிசாசுகளை நடுநடுங்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே ,

பாவிகளை மனந்திருப்பும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமலோற்பவம் என்னும் நாமம் பூண்ட ஜென்ம இராக்கினியாய் விளங்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக :

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே! ஆதாம் ஏவாள் பாவத்தால் சாபத்தை அடைந்து உலகில் பிறக்கும் மனிதன் இறக்குமட்டும் கஷ்டப்பட்டே தீர வேண்டும் என்கிற உண்மை எல்லோரையும் விட உமக்கே பகல் வெளிச்சம் ஆதலின் சாதி மத பேதமின்றி துன்புறுவோரை எல்லாம் வாருங்கள் என்று அழைத்து அவர்களது துன்பத்தை அகற்றி இன்பத்தை ஊட்டி வரும் உமது அன்பே அன்பு ; அனுதாபமே அனுதாபம் ; இந்தப் பாக்கியத்தை எல்லோரும் அடைய வேண்டி  தேவ சந்நிதானத்தில் மன்றாடி மனுப்பேசி அதற்கான அருளையும் ஒளியையும் அடைந்து தாரும் தாயே!

ஆமென்.