சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - ஐந்தாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

வேதவிரோதிகள், பிரிவினைக்காரரின் ஆன்மாக்களுக்காக.

"இன்று பிரிந்துபோன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. எனது கசப்பான பாடுகளின் போது எனது உடலையும் உள்ளத்தையும் (அதாவது என் திருச்சபையை) இவர்கள் கிழித்தார்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக இவர்கள் எனது பாடுகளின் அகோரத்தைத் தணிப்பார்கள்'' என்றார் சேசு.

இரக்கமிகுந்த சேசுவே! நன்மையின் உருவே ! உம்மிடம் ஒளியைத் தேடும் எவருக்கும் நீர் மறுத்ததில்லை. பிரிந்து போன எம் சகோதரர்களை இரக்கமிகுந்த உம் இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும். உமது ஒளியால் இவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்புக்கு இழுத்தருளும். உமது இரக்கத்தின் தாராளத்தை இவர்களும் புகழ வருவார்களாக!

நித்திய பிதாவே! பிரிந்து போன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீதும், விசேஷமாய் தங்கள் தப்பறையில் பிடிவாதமாக ஊன்றி நின்று உமது வரப்பிரசாதத்தை விரயம் செய்து உமது ஆசீரை உதறிவிட்டவர்களின் மீதும், உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இவர் களது குறைகளைப் பாராமல், உமது சொந்த குமாரனின் அன்பையும், இவர்களுக்காக அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த் தருளும். ஏனெனில் இவர்களும் சேசுவின் கருணை மிகுந்த இருதய இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளார்கள். ஊழிக்காலம் உமது பெரும் இரக்கத்தை இவர்களும் புகழ்ந்தேத்துவார்களாக!

ஆமென்.