மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித மரியாயின் பரிசுத்த இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய திரு இருதயத்துக்கு உகந்த திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த ஆவிக்குப் பிரிய சங்கீதமாகிய இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித திருத்துவத்தின் தேவாலயமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாம்சமாய் அவதரித்த தெய்வீக வார்த்தைக்குப் பிரிய இருப்பிடமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரியத்தத்தத்தினாலே பூரணமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல இருதயங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகிமைப் பிரதாபச் சிம்மாசனமாகிற திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த தாழ்ச்சியுள்ள திரு இருதயமே திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ சிநேகத்தின் பலியான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுக்கிறிஸ்து நாதரோடு சிலுவையில் அறையுண்ட திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலாகிய திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரிக்கிறவர்களுக்கு நம்பிக்கையாகிய திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரக்கத்திற்கு இருப்பிடமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இயேசுக்கிறிஸ்து நாதாருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உடைத்தான மாசற்ற மரியாயே! எங்கள் இருதயம் இயேசுவின் திரு இருதயத்தைப் போலாகும்படி செய்தருளும்.

செபிப்போமாக 
இரக்கம் நிறைந்த சர்வேசுரா! அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயின் மாசற்ற இருதயம் பாவிகளுக்கு இரட்சணியமும் , நிர்பாக்கியருக்கு அடைக்கலமுமாய் இருக்கத்தக்கதாக அத்திரு இருதயத்தை சிநேகத்தினாலும் , இரக்கத்தினாலும், உமது திருக்குமாரன் இயேசு நாதருடைய திரு இருதயத்துக்கு மிகவும் ஒத்ததாயிருக்கச் செய்தருளினீரே! இந்த மிகுந்த மதுரமும் அன்பும் பொருந்திய இருதயத்தைக் கொண்டாடுகிற நாங்கள் அந்த பரிசுத்த கன்னிமரியாளின் பேறு பலன்களாலும் சலுகையாலும் இயேசுவின் திரு இருதயத்துக்கு உகந்தவர்களாய்க் காணும்படி அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி!

ஆமென்.