குருக்களுக்காக வேண்டும் செபம்.

அன்பான ஆண்டவரே! குருக்களைக் காப்பாற்றும்படியாக உம்மை மன்றாடுகிறேன். அவர்கள் உம்முடையவர்கள். அவர்களுடைய வாழ்க்கை திருப்பலிப் பீடத்தில் பணிபுரிவது என்பதனால், அவர்களைச் சிறப்பாக காப்பாற்ற வேண்டுகிறேன். அவர்கள் உலகைவிட்டுப் பிரிந்தாலும், உலகின் நடுவில் வாழ்கிறார்கள். பல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிக்கின்றன. எனவே அவர்களை உமது இதயத்தில் வைத்துப் பேணிட மன்றாடுகிறேன்.

அவர்கள் தனிமையில் தவிக்கும்போது, துன்பங்களினால் வாடும்போது, அவர்களுடைய தியாக வாழ்வே வீண்எனத் தோன்றும் போது அவர்களை அருகிருந்து காப்பாற்றும். அவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும்.

சிறப்பாக நீர் எங்களுக்கு வழங்கியுள்ள குருக்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களை நீர் உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கும் மக்களுக்கும் அவர்கள் பணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும். என்றென்றும் வாழும் குருவாம் கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்.

ஆமென்.