✠ காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின்

புனிதர் அகஸ்டின் ஒரு “பெனடிக்டைன்” சபைத் (Benedictine monk) துறவி ஆவார். இவர், கி.பி. 597ம் ஆண்டு, காண்டர்பரி உயர்மறை மாவட்டத்தின் முதல் பேராயர் (Archbishop of Canterbury) ஆனார். இவர் ஆங்கிலேயர்களின் அப்போஸ்தலர் (Apostle to the English) என்றும், ஆங்கிலத் திருச்சபையை தோற்றுவித்தவர் (Founder of the English Church) என்றும் கருதப்படுகின்றார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஆவார். 596ம் ஆண்டு, ரோம் நகரின் துறவு மடத்திலிருந்து, இவரது தலைமையில் திருத்தந்தை பெரிய கிரகோரியார் (Pope Gregory the Great) 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டின் "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) பிரஜைகளை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றுவதற்காக மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

மிகவும் கடினமாகப் பயணித்து "கௌல்" (Gaul) சென்றடைந்த அவர்கள், "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) மக்களின் முரட்டுத்தனம் பற்றிய கதைகள் அவர்களை பயமுறுத்தின. "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) தாண்டிச் செல்வதும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. திருத்தந்தையின் அறிவுறுத்தல்களை அறிந்துகொள்வதற்காக, அகஸ்டின் ரோம் நகருக்கு திரும்பிச் சென்றார். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு 'சாக்சென்' மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

வதந்திகளையும் பயமுறுத்தல்களையும் கண்டு அஞ்சவேண்டாம் என அறிவுறுத்திய திருத்தந்தை, இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுமாறும், தியாகங்கள் செய்யுமாறும், என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, மறைபோதக பணியை செய்யத் தயாரானார்கள்.

இம்முறை "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) கடந்த அவர்கள், கென்ட் பிரதேசத்தில் (Territory of Kent) இறங்கினார்கள். கென்ட் (Kent) பிரதேசம், "பாகனிய" (Pagan) மதத்தைச் சேர்ந்த அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) என்பவனின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவனது மனைவி, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பெண்ணாவார். அவரது பெயர், "பெர்தா" (Bertha) ஆகும். அவர்களை அன்புடன் வரவேற்ற அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) காண்டர்பரி (Canterbury) நகரில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தான்.

ஒரு வருட காலத்திலேயே, (597ம் ஆண்டு) தூய ஆவியின் திருநாளன்று (Pentecost Sunday) அரசன் "ஈதல்பெர்ட்" திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக மெய்மறையில் மனம் மாறினான். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவன்று மனம்திரும்பி புதிதாய் திருமுழுக்கு பெற்றனர்.

ஃபிரான்ஸ் (France) நாட்டில் ஆயர் ஒருவருக்கு அருட்பொழிவு செய்வித்துவிட்டு காண்டர்பரி (Canterbury) திரும்பிய அகஸ்டின், 1070ம் ஆண்டு, புதிதாய் தொடங்கப்பட்ட பேராலயத்தின் அருகே, அப்போதைய ஆலயம் ஒன்றையும், துறவு மடம் ஒன்றினையும் கட்டினார்.

மக்களிடையே கிறிஸ்தவ விசுவாசம் அதிசயிக்கத்தக்க வகையில் பரவியது. ஆகவே, "லண்டன் மற்றும் ரோச்செஸ்டர்" (London and Rochester) ஆகிய இடங்களிலும் புதிய மறை மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

அதேபோல, அகஸ்டினின் பணிகள் சில நேரம் மெதுவாக ஊர்ந்தன. அதேபோல, அவர் எப்போதுமே வெற்றியையே சந்திக்கவுமில்லை. ஒரு காலத்தில், ஆங்கிலோ-சாக்சன் படையெடுப்பாளர்களால் மேற்கத்திய இங்கிலாந்து (Western England) நோக்கி விரட்டப்பட்ட அசல் பிரிட்டன் கிறிஸ்தவர்கள் (Original Briton Christians) ஆகிய இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயன்ற இவரது பிரயத்தனங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்தன.

சில செல்டிக் பழக்கங்களை (Celtic customs) கைவிடுமாறும், ரோம் நகருடனான வேறுபாடுகளை களையவும், பழைய கசப்பான அனுபவங்களை மறக்கவும், பிரிட்டன் கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

பொறுமையாக போராடியதாலும், கடின உழைப்பாலும், மிஷனரி கொள்கைகளை ஞானமுடன் செவிமடுத்ததாலும், திருத்தந்தை கிரகோரி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளாலும், குறிப்பாக - பாகன் ஆலயங்களையும் அவர்களது சடங்குகளையும் இடிப்பதைத் தவிர்த்து அவற்றை கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றவும், பாகனிய விழாக்களை நிறுத்துவதை விடுத்து, அவற்றை கிறிஸ்தவ விழாக்களாக கொண்டாடவும் ஆரம்பித்தனர். இதன் காரணங்களால், இங்கிலாந்து வந்து குறுகிய எட்டு வருடங்களிலேயே சிறிதளவேயானாலும் பெரும் வெற்றியை அடைந்தார். ஆகவே, அவரை இங்கிலாந்தின் அப்போஸ்தலர் என அழைப்பது சாலச் சிறந்ததுவேயாகும்.

கி.பி. 604ம் ஆண்டு மரித்த அகஸ்டின், “காண்டர்பரியிலுள்ள” புனித அகஸ்டின் துறவு மடத்தில் (St Augustine's Abbey, Canterbury) அடக்கம் செய்யப்பட்டார்.