அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ் சவேரியார்.

அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier) ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்கசவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்துவந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பலமொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில்கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.

கல்வி.

1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ்சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலேஇருந்த அர்ச்சியசிஷ்ட சவேரியார், அங்குள்ள அர்ச்சியசிஷ்ட பற்பேகல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில்முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரைவிரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும்1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது அர்ச்சியசிஷ்ட சவேரியாருக்கு அர்ச்சியசிஷ்ட இலொயோலாஇஞ்ஞாசியார் நண்பரானார், "உலகையேஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவைஇழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையைஇஞ்ஞாசியார்,சவேரியாருக்கு எடுத்துரைக்கசவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்துஇறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர்இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில்மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியைசெய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும். - சவேரியாரின் பயணங்கள்.

இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம்நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல்திருப்பலியை செப்டம்பர் 30ஆம் நாள்நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடையநண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்துஇறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத்தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசியமன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக்குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார்இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப்பயணம் மேற்கொண்டார்.

அர்ச்சியசிஷ்ட சவேரியார் 1540இல் உரோமில் இருந்து புறப்பட்டுலிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம்இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும்வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியைசெய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் நாள் கோவாவைவந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும்பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக்கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச்செய்துவந்தார்.

சவேரியார் பிறந்த சவேரி கோட்டை.

1543இல் தென்திருவிதாங்கூரில் தற்போதையகன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத்தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள்தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள்கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றியசெய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும்வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பலஆலயங்கள் அர்ச்சியசிஷ்ட சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக்குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள்நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர்நிறுவினார் என்று காண்கிறோம். கி.பி. 1544-ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீரகேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்ததிருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசயநகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன்வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்துநிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமற் போகவேஅவர் அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் உதவியை நாடினார். விசயநகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டைநெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும்செபமாலையும் உயர்த்திப் படித்து வடுகர்ப்படைகளளைபின்வாங்கும்படி கர்ச்சித்தார். அர்ச்சியசிஷ்ட சவோரியாரின்இந்த திடீர் செயலானது வடுகப்படையினரைநிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்புஊதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராகநிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கியவடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கிவேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும்ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்கஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமணமண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.

“They called me great king, but hereafter for ever they will call you the Great Father"

என்று மன்னர் அர்ச்சியசிஷ்ட சவேரியாரை நன்றியுணர்வுடன்பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு அர்ச்சியசிஷ்ட சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயேநிறுவப்பட்டுள்ளது. ஒரு முறை கடலில் பயணம்செய்யும் போது அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் சிலுவைதொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும்ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்துசேர்த்தது என்பர்.

மரணம்.

அர்ச்சியசிஷ்ட சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும்தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச்செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால்பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும்போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும்1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயேஅடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

அழியா உடல்.

சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப்பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டதுபோலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச்22, 1553ஆம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டு போகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது.

450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும்படியாக வைக்கப்பட்டுள்ளது.