(3) திவ்விய பலி பூசை

இது தேவசிநேகத்தின் உந்நதமான அற்புதம்; கடவுளின் மாபெரும் சாதனை. இதிலே நம் பேரில் தாம் கொண்டுள்ள சிநேகம் முழுவதையும் அவர் நம் பார்வைக்கு வைக்கிறார் (அர்ச். பொன வெந்தூர்). உத்தமமான விதத்தில் பூசையில் பங்கடைகிறவன் சேசுவோடு தானும் பாவப் பரிகாரப் பலியாகிறான், அவருடைய மரணத்துக்கு ஒத்த சாயலாகிறான் (பிலிப். 3:10).

இவ்வுலகத்தை விட்டு நாம் புறப்பட்டதும், நம் ஆன்மாக்களுக்காக திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படுவதை விட அதிகமாக நாம் வேறொன்றையும் ஆசிக்க மாட்டோம். பீடத்தின் திவ்ய பலிபூசையே அனைத்திலும் அதிக வல்லமையுள்ள மத்தியஸ்த ஜெபமாக இருக்கிறது. ஏனெனில் அது ஒவ்வொரு ஜெபத்திற்கும், தவ முயற்சிக்கும், நற்செயலுக்கும் அப்பாற்பட்டதாக இருக் கிறது. பூசை என்பது சிலுவையில் நமதாண்டவர் ஒப்புக்கொடுத்த அதே பலிதான் என்பதையும், இப்போது அப்பலியை அவர் அதன் அளவற்ற பரிகார மதிப்புடன் ஒப்புக்கொடுக்கிறார் என்ப தையும் நாம் நினைவுகூர்வோம் என்றால், மேற்கூறிய காரியத்தைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமாயிராது. பலியிடப்பட்ட சேசு ''நம் பாவங்களுக்குரிய பரிகாரப் பலியாக" இருக்கிறார் (1 அரு . 2:2). அவருடைய திவ்விய இரத்தம் "பாவமன்னிப்புக்காக" சிந்தப்படுகிறது (மத். 26:28).

இந்தப் பயன்மிக்க திவ்விய பலியில் நாள்தோறும் அன்போடும், தாழ்ச்சியோடும், அர்ப்பண உணர்வோடும் பங்கு பெற நாம் உண்மையாகவே முன்வருவோம் என்றால், நரகத்தை மட்டும் மல்ல, மாறாக உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுத்திகரிக்கிற நெருப்பையும் கூட தவிர்த்து விடுவோம் என்பதில் நாம் உறுதியாயிருக்கலாம்.

நம் அனுதின வாழ்வில், திவ்விய பலி பூசையை மற்ற எந்த நன்மைக்கும் மேலான நன்மை யாக நாம் கொள்ள வேண்டும். ஏனென்றால் அர்ச். பெர்னார்ட் கூறுவது போல், "ஒருவன் தன் உடமையெல்லாம் ஏழைகளுக்கு வழங்கி, உலக முழுவதும் திருயாத்திரை சென்று சம்பாதிக்கக்கூடிய ஒட்டுமொத்த பேறுபலனைவிட, ஒரேயொரு பூசையில் பக்தியோடு பங்கு பெறுவதன் மூலம் அதிகம் சம்பாதிக்கிறான். இது வேறு எப்படியும் இருக்க முடியாது. ஏனெனில் பூசையின் அளவற்ற மதிப்பை உலகிலுள்ள வேறு எதுவும் கொண்டிருக்க முடியாது. மனிதன் உன்னதமான முறையில் கடவுளை மகிமைப்படுத்தவும், சந்தேகத்திற்கு இடமின்றி தன் ஆத்துமத்தைக் காத்துக்கொள்ளவும் திவ்விய பலி பூசையைவிட அதிக உத்தமமான சாதனம் வேறெதுவுமில்லை .''