தவமிருந்தோம் உம்மைக் காண மாமரியே

தவமிருந்தோம் உம்மைக் காண மாமரியே
தரிசனம் நீ தரவேண்டும் ஏழை எமக்கே
உந்தன் அன்பு ஒன்றே போதும்
உன்னைப் பாடும் ஜீவநாதம்
எங்கள் அன்னையே எங்கள் அன்னையே
அம்மா மரியே தாயே மரியே

1. அகிலம் போற்றும் அன்னைமரியே
ஆண்டவனின் அன்புத்தாயே
ஞாலம் போற்றும் ஞானம் நீயே
காலம் போற்றும் கன்னித்தாயே
எங்கள் குறை யாம் உணர்ந்தோம் ஆ
உந்தன் பாதம் நாடி வந்தோம்
யாருமில்லா ஏழை எங்கள்
துயரம் போக்குவாய்

2. இதோ உந்தன் அடிமை என்றாய்
இறைவனின் அன்னை ஆனாய்
பெண்களுள் பேறு பெற்றாய்
அருள்நிறை அன்னை ஆனாய்
கோடி மக்கள் குறைகளெல்லாம் ஆ
தீர்த்து வைக்கும் எங்கள் தாயே
தஞ்சமென்று நாடி வந்தோம்
கருணை காட்டுவாய்