நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்

நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
எந்நாளுமே அன்னையின் புகழ்பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்
புகழ்ப்பாக்கள் பாடிடுவோம்
ஆ அன்னையே வாழ்க
அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க

1. இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றிட மனமுவந்தாய் - என்றும்
மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்

2. தரணிக்குத் தாயானாய் - திருத்
தாய்மையைப் பாடுகின்றோம் - என்றும்
திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்
தாயே உன் அருள் தாராய்