வாலிபர் ஆத்தும சரீர பரிசுத்த கற்படைய மன்றாட்டு

சர்வ வல்லபரும் எல்லாத்தையும் பார்க்கிற வருமாகிய சர்வேசுரா!  என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சணச் சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் அசுத்தப்படுத்தாதபடிக்கு எனக்கு அனுக்கிரகம் செய்தருளும். நமது தேவாலயத்தை யாதாமொருவன் அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போமென்று திருவுளம் பற்றினீரே.  சுவாமி! உமது வேதமொழியின்படியே என் சரீரமே உமது தேவாலயமாயிற்று. இதிலே உமது இஷ்டப் பிரசாதத்தினால் உமது இஸ்பிரீத்துசாந்துவானவர் வாசம் செய்யச் சித்தமாயிருக்கிறதுமன்றி, அநேக முறை உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதரும் தேவ நற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார்.  ஆகையால் பரிசுத்தமுள்ள கர்த்தாவே! உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். கற்புக்கு விரோதமான ஒரு அற்ப மாசும் என் ஆத்துமத்திலாவது, சரீரத்திலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும். என் திவ்விய இரட்சகரான சேசுவே!  இந்த விலை மதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது விசேஷமான அனுக்கிரகம் வேண்டியிருக்கிறதினால் கற்பை விரும்புகிறவரும் கன்னியாஸ்திரீகளுக்கு நிறைந்த தயவுள்ள இராஜாவுமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் பரிசுத்த புண்ணியத்தைக் கேட்க வருகிறேன். உமது வரப்பிரசாதத்தினால் எத்த னையோ பேர் இவ்வுலகத்தில் சம்மனசுக்களைப் போலப் பரிசுத்தமாய் நடந்தார்கள்! அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள்!  ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப் போக நியாயமில்லை.  மனத் திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே!  தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல என்னையும் புண்ணிய நெறியில் உறுதிப்படுத்தியருளும்.  அவர்களால் ஆனதுபோல் உம்மைக் கொண்டு என்னாலும் எல்லா நலமுமாகக் கூடும். உமது தோத்திரத்துக்கும் என் இரட்சணியத்திற்கும் விரோதியாகிய சத்துரு  தன் சோதனையால் என்னை மயக்குவித்து ஜெயிக்காதபடி அடியேன் இடை விடாமல் சுறுசுறுப்போடே வேண்டிக் கொள்ளவும், என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே நடக்கவும் தயைபுரியும். நான் என் புத்தி நினைவை திடமாய் ஒழுங்குபடுத்தி, என் ஐம்புலன்களையும் எந்நேரமும் அடக்கி பாவசமயங்களையயல்லாம் தைரியமாக விலக்கி, என்னை அசுத்தப்படுத்து வதான எல்லாவற்றையும் மகா அருவருப்புடனே யோசித்து ஓர் அற்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி நுணுக்கமான பக்தியுடன் பரிசுத்த மாய் நடந்து மிகப் பூச்சியமும் எளிதில் தேய்ந்து போவதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில் லாமல் காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.

மகா பரிசுத்தமுள்ள மாதாவே எனக்கு அடைக் கலமாயிரும்.  அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடி எனக்குப் பரிசுத்தமான இருதயத்தைக் கொடுத்தருளும்.  எனக்குக் காவ லான சம்மனசானவரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். 

ஆமென்.