தேவமாதாவை நோக்கி அநுதினம் வேண்டிக்கொள்ளும் ஜெபம்

சம்மனசுக்களுடைய இராக்கினியே! மனிதர்களுடைய சரணமே! சர்வலோகத்துக்கும் நாயகியே!  நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். எப்படியாகிலும் எங்களை இரட்சிக்க வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். தாயாரே! மாதாவே! ஆண்டவளே! உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும்.  விசேஷமாய் நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களையயல்லாம் தள்ளிப் போட்டு, உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய அண்டைக்கு நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும். இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்கிறோம். இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே!  

ஆமென்.