பரிசுத்த பாத்திமா ஜெபமாலை மாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

2. பரிசுத்த பாத்திமா ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

3. பாத்திமாவென்னும் சிற்றூரில் மூன்று ஆடு மேய்க்கும் பிள்ளைகளுக்கு ஆறு விசை தரிசனையான ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

4. சிறு பிள்ளைகளைப் போல் ஆவது மோட்ச இராச்சியத்துக்கு அவசியம் என்று காண்பிக்க, மூன்று ஏழை பாமரச் சிறு பிள்ளைகளுக்கு காட்சியளித்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

5. அமைதியான ஆத்துமத்திலேயே ஆண்டவர் பேசுகிறார் என்பதைக் காண்பிக்க ஏகாந்தமும் அமைதியும் பொருந்திய மலைச் சாரலில் காட்சியளித்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

6. தம்மைத் தேடும் மக்களை தேவனும் தேடுகிறார் என்று காண்பிக்க, ஜெபமாலைப் பக்தியில் சிறந்து விளங்கி, “மரியாயின் நிலம்” என்று அழைக்கப்பட்ட போர்த்துக்கல் நாட்டில் தரிசனை கொடுக்க திருவுளமான ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

7. செபமும் தவமும் கிறீஸ்தவ வாழ்வுக்கு அத்தியாவசியம் என்பதைக் காண்பிக்க, பத்து வயதுக்கு உட்பட்ட சிறு பிள்ளைகளிடத்தில் செப தவம் செய்யும்படி கேட்ட ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

8. இரட்சண்யமடையவும் உலக சமாதா னத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஜெபமாலை ஜெபிப்பது மிக அவசியம் என்று காண்பிக்க, காட்சி தந்த ஆறு தடவையும் அனுதினம் ஜெபமாலை சொல்லும்படி கேட்டுக் கொண்ட ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

9. பூலோகக் கவலைகளில் சிக்குண்டிருக் கிற நாங்கள் பரலோகத்துடன் எவ்வித தொடர்புகொள்ள வேண்டுமானாலும் அதற்கு தகுந்த ஆயத்தம் அவசியம் என்று காண்பிக்க அக்குழந் தைகளுக்கு பரலோக காட்சிகளுக்கு முன்னால் ஒரு தேவதூதனை அனுப்பி ஒரு வருட காலமாய் அவர்களைத் தயாரித்து வந்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

10. சர்வேசுரனை விசுவசித்து ஆராதித்து நம்பி நேசிப்பது ஒவ்வொரு மனிதனுடையவும் கடமை என்று காண்பிக்க, சம்மனசின் முதல் காட்சியிலேயே அதற்கேற்ற அரிய ஜெபம்  ஒன்றை எங்களுக்குக் கற்றுத் தந்த ஜெபமாலை மாதாவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

11. கடவுளின் திருச்சந்நிதியில் மனிதன் மிகுந்த தாழ்ச்சியுடன் பணிந்து ஆராதனை செய்ய வேண்டும் என்று காண்பிக்க, நெற்றி தரையில் பட அச்செபத்தை சம்மனசானவர் சொல்லும்படி கட்டளையிட்ட ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

12. பாவத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் காப்பாற்றும்படி ஆண்டவரிடம் மன்றாடுவது அவசியம் என்று காண்பிக்க, ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணி முடிவிலும் அதற்கான ஒரு தனிச் செபம் சொல்லும்படி கற்பித்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

13. ஒறுத்தல் முயற்சி செய்வது அவசியம் என்றும் எங்களுக்கு இவ்வுலகில் நேரிடும் எல்லாவற்றையும் பாவப் பரிகாரமாக நாங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும், சம்மனசின் வாயி லாக போதித்தருளிய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

14. சுவிசேஷ போதனைகளையும் திருச்சபை யின் படிப்பினைகளையும் நாங்கள் மறந்து விடா திருக்கும்படியாக, உங்களுடைய காட்சிகளா லும், உரையாடல்களாலும் கத்தோலிக்க ஞான உபதேசத்தை முழுமையாகப் போதித்தருளிய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

15. சேசுக்கிறீஸ்துநாதர் திவ்விய நற்கருணை யில் மெய்யாகவே இருக்கிறார் என்ற மகா     உந்நத சத்தியத்தில் உண்மையைக் காண்பிக்க, அப்ப ரச குணங்களில் நற்கருணையை ஏந்திய சம்மனசானவரை அனுப்பி, அதிலே சேசுவை அம்மூன்று குழந்தைகளும் ஆராதித்து அவரை உட்கொள்ளும்படிச் செய்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

16. தேவ நற்கருணையில் அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் முந்திரிகைப் பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் சேசுநாத ருடைய திருச்சரீரம், இரத்தம், ஆத்துமம், தேவ சுபாவம் எல்லாம் அடங்கியிருப்பதையும், அந்த சேசுக் கிறீஸ்து உலகத்திலுள்ள எல்லா தேவ நற்கருணைப் பேழைகளிலும் இருக்கிறார் என்ப தையும் தேவதூதனின் மற்றொரு ஜெபத்தால் எங்களுக்குப் படிப்பித்தருளிய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

17. நன்றியற்ற மனிதரால் சகிக்கக் கூடாத விதமாய் நிந்தைப்படும் நற்கருணை ஆண்டவருக்கு நிந்தைப் பரிகாரமாக, மிக அன்புடனும் பக்தியுடனும் பரிகார நன்மை உட்கொள்ளும்படி அச்சிறுவர்களைத் தூண்டிய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

18. சேசுவின் திரு இருதயத்துடன் உங்கள் மாசற்ற இருதயமும் ஒன்றாக நேசிக்கப்பட்டு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் சித்தம் என்று கூறி, அதற்காக முதல் சனிக்கிழமைப் பக்தியை ஏற்படுத்திய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

19. மரியாயின் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்யும் கருத்தோடு தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொண்டு, 53 மணி ஜெபமாலை சொல்லி கால் மணி நேரம் ஜெபமாலை தேவ இரகசியங்களை தியானித்தபடி மாதாவுடன் தங்கி இருப்பதே முதல் சனி பக்தி என்று லூஸியாவுக்கு விளக்கிக் கூறிய ஜெப மாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

20. மரியாயின் அமலோற்பவம், தெய்வீகத் தாய்மை, முப்பொழுதும் கன்னிமை ஆகிய சிறப்புகளுக்கு எதிராகவும், மாதாவின் பக்தியை அழிப்பதும், மாதாவின் திரு உருவங்களை அகற்றி அவமதிப்பதும் ஆகிய ஐந்து வகை நிந்தைகளுக்குப் பரிகாரமாகவே ஐந்து முதல் சனி பக்தி என்று சேசுவே விளக்கிக் கூறும் அளவுக்கு தேவ சலுகையைப் பெற்றுள்ள ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

21. முதல்சனி பக்தியைப் பிரமாணிக்க முடன் அனுசரிப்பவர்களின் மரண சமயத்தில் ஈடேற்றத்திற்கு அவசியமான சகல உதவிகளை யும் அவர்களுக்குச் செய்வதாக வாக்களித்துள்ள ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

22. பாவத்தின் பலனாக யுத்தம், பஞ்சம் ஆகிய துன்பங்கள் நேரிடுகின்றன என்று கூறி, அவற்றை தடுக்க செபமாலையும் தவ முயற்சி களும் செய்து உங்கள் மாசற்ற இருதயப் பக்தியைக் கைக்கொள்ளும்படி தூண்டி, இதுவே பாத்திமா செய்தி என உலகிற்கு உணர்த்தி வருகிற ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

23. பாத்திமா காட்சிகள் கடவுளால் ஆனவை என்று எல்லோரும் நம்பும்படியாக, 1917 அக்டோபர் மாதம் 13-ம் நாளில் 6-ம் காட்சியின் போது சூரியனில் மாபெரும் அதிசயத்தை நிகழ்த்திய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

24. உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட் டால் ரஷ்யா மனந்திரும்பும், உலக சமாதானம் வரும்.  இல்லாவிடில் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும், யுத்தங்களையும் வேத கலாபனைகளையும் தூண்டிவிடும் என்று எச்சரித்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

25. மனிதர்கள் போதிய செபம், தவம், ஜெப மாலை சொல்லாவிட்டால் ரஷ்யாவின் தப்பறை கள் பரவி மகா பெரிய ஆக்கினைகள் வரும் என்று தீர்க்கதரிசனமாக கூறியுள்ள ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

26. ரஷ்யா மனந்திரும்புவதற்கு ஏதுவாக, அந்நாட்டை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு பாப்பரசர் உலக மேற்றிராணிமார்களுடன் சேர்ந்து ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற சேசு வின் நிபந்தனையை லூஸியாவிடம் அறிவித்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

27. நாங்கள் நம்பிக்கை இழந்து போகா வண்ணம், “இறுதியில் என் மாசற்ற இருதயம் வெல்லும்; பாப்பரசர் ரஷ்யாவை என் இருதயத்துக்கு ஒப்புக்கொடுப்பார். உலக சமாதானம் வரும்” என்று கூறி அருளிய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

28. பாவிகளுக்காக செபித்து பரித்தியாகம் செய்ய ஆளில்லாததால், அநேக ஆன்மாக்கள் நரகத்திற்குப் போகிறார்கள் என்று வேதனை யுடன் கூறி, பாவிகளுக்காக எங்களை மன்றாடத் தூண்டிய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

29. நரகத்திற்குச் செல்லும் பாவிகளில் பெரும்பாலானவர்கள் கற்புக்கெதிரான பாவங் களுக்காகவே அங்கு செல்கிறார்கள் என்று ஜஸிந்தா வழியாகக் கூறி, பரிசுத்ததனத்தின் மட்டில் எங்கள் கடமையை உணர்த்திய ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

30. பாப்பரசரும் திருச்சபையும் கொடுமை யாக அலைக்கழிக்கப்படுவதை முன்கூட்டியே அறிவித்து, அதிலிருந்து காப்பாற்றும்படி அதிக மான செபதவம் அனுசரித்து, ஜெபமாலையைப் பக்தியுடன் தியானித்துச் சொல்லும்படி கற்பித்த ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

சேசுவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக, பாத்திமா ஜெபமாலை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

தமது ஜீவியத்தாலும், உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணியப் பேறுபலன் களை சம்பாதித்தருளிய ஏகபுத்திரனின் பிதா வாகிய சர்வேசுரா சுவாமி!  அந்த தேவ இரகசியங் களை முத்திப்பேறுபெற்ற அர்ச். கன்னி மரியா யின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாக நினைவுகூரும் அடியோர்கள் பாத்திமாவில் அவர்கள் காட்டிய வழியின்படியே நடந்து வாக்குத்தத்தங்களின் பேற்றையடையத்தக்கதாக உதவி புரிந்தருளும். இவைகளையயல்லாம் எங்கள் ஆண்டவ ராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

பாத்திமா ஜெபமாலை மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.  (3 விசை).