துன்ப துரிதங்களில் வேண்டும் ஜெபம்

ஆண்டவரே! என் பேரில் இரக்கமாயிரும். நிர்ப்பாக்கியப் பாவியாயிருக்கிற என்பேரில் இரக்கமாயிரும். உமது நீதியின்படியே நான் துன்ப துரிதங்களை அனுபவிக்கப் பாத்திரமுள்ளவனா யிருக்கிறேன்.  சுவாமி. நீர் நீதிபரராயிருக்கிறதினால் எங்கள் பாவப் பரிகாரத்துக்காக எங்களை உமக்குத் தயார் செய்கிறதற்கு எங்களுக்குத் துன்பங்களை அனுப்புகிறீர்.  என் ஜீவிய காலத்தில் சோதனைகளை விதிப்பயன் என்று கருதாமல், உம்மால் அனுப்பவும், நடத்தவும்பட்டு வருகிறது என்று அறிந்து விசுவசிக்கிறேன்.  என் பாவங்களுக்குத் தக்கபடி என்னைத் தண்டித்து நடத்தாமல், உமது பெருத்த இரக்கத்துக்குத் தக்கபடி என்னை நடத்தியருளும். நீர் எனக்குத் துன்ப துரிதத்தை அனுப்பும்போது பொறுமையோடு பொறுக்கவும், தெய்வ சித்தத்தின்படியே ஆகக் கடவது என்கிற வார்த்தை என் நாவை விட்டு அகலாதிருக்கவும் செய்தருளும். மகா நேசத்துக் குரிய பிதாவே, துன்பங்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளவே, என் ஆத்துமமானது கசப்பான சஞ்சல சாகரத்தில் மூழ்கிப் போயிற்று.  எனது சிருஷ்டிகரும், மீட்பருமான உம்மிடத்தில் வருவதைப் பார்க்கிலும் வேறெந்த இடத்திற்குப் போவேன்?  சுவாமி, உமது கையின் கீழும், தண்டனையின் கோலின் கீழும் அமைந்திருக்கிற என்னை நோக்கிப் பாரும். என் சித்தத்தை உமது சித்தத்தோடு ஒன்றாகச் செய்தருள உம்மைத் தாழ்ச்சியோடு மன்றாடுகிறேன்.  நீர் என் பலவீனத் தையும், துன்பத்தையும் அறிவீர்.  நீர் என்னை நோக்கி என் கண்ணீரைத் துடைத்து சந்தோ­ப் படுத்தும்.  என் ஆத்துமத்தை உமது திருக்கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன்.  அதைக் கையேற்றுக் கொள்ளும். 

ஆமென்.