அர்ச். ஆரோக்கியநாதர் ஐந்து மன்றாட்டு

முந்த முந்த உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லுகிறது.

1. மிகவும் மேன்மையும் கனமும் பொருந்திய வம்சத்தில் பிறந்து மகா பரிசுத்ததனத்தை அநுசரித்துக் கொண்டு வந்த அர்ச். ஆரோக்கிய நாதரே வாழ்க. பர. அருள். திரி.

2. மிகவும் அலங்காரமுள்ள அர்ச். திருச் சிலுவையின் ஆசீர்வாதத்தால் கொள்ளை நோய் கொண்ட அநேக ஜனங்களை இரட்சித்தது போல எங்களை ஆசீர்வதித்து, நோய்களிலிருந்து  எங்களை உமது கரத்தால் மறைத்துக்கொண்டு வருகிற அர்ச். ஆரோக்கியநாதரே வாழ்க. பர. அருள். திரி.

3. பொய்யான பிரபஞ்ச வாழ்வைச் சொற்ப மாக எண்ணி அதை வெறுத்துத் தள்ளி மெய் யயன்னும் பானத்தை உட்கொண்டு உலகத்தை விட்டுத் தபோதனராயிருந்த அர்ச். ஆரோக்கிய நாதரே வாழ்க. பர. அருள். திரி.

4. நோய் கொண்டவர்களை அண்டித் தொட்ட வுடனே அவர்கள் நல்ல ஆரோக்கியத்தை அடைய வரம்பெற்றவரான அர்ச். ஆரோக்கியநாதரே வாழ்க. பர. அருள். திரி.

5. தேவ கிருபையோடு சம்மனசினால் அறிவிக்கப்பட்டு சகலவித கொள்ளைநோய்களையயல்லாம் அகற்றி விட வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கியநாதரே வாழ்க. பர. அருள். திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங் களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! எந்தெந்த கொள்ளை நோய்களால் வருத்தப்பட்டு சாவுக்கு ஆயத்தப் படாதபடிக்கு தேவரீருடைய சம்மனசானவரைக் கொண்டு அர்ச். ஆரோக்கியநாதருக்கு அறிவித்து அவருக்கு வேண்டிய வார்த்தைப்பாடு கொடுத் தீரே.  ஆகையால் அவருடைய திருநாமத்தை ஸ்துதித்துக் கொண்டாடுகிற நாங்கள் அவருடைய பேறுபெற்ற பலன்களினாலே எங்கள் ஆத்து மத்திற்கும் சரீரத்திற்கும் பொல்லாப்பா      யிருக்கிற இந்த நோய்களிலே நின்று எங்களை இரட்சிக்கத் தேவரீரை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவ ராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.