சேசுநாதருடைய திருத்தோள் காயத்தின் ஜெபம்

என் நேசத்துக்குரிய சேசுவே, கடவுளின் மாசற்ற செம்மறியே!  நான் மிகவும் நிர்ப்பாக்கிய பாவி யானாலும், நீர் உமது பாரமான திருச்சிலுவை யைச் சுமந்துகொண்டு போனபோது உமது திருத் தோளை நிஷ்டூரமாய்க் கிழியச் செய்து, உமது திருச் சரீரத்திலுண்டான சகல காயங்களால் நீர் அனுப வித்த துயரத்தைப் பார்க்கிலும் அதிக துயரத்தை வருவித்த உமது திருத்தோளின் காயத்தைச் சாஷ்டாங்கமாய் வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  மட்டற்ற துயரப்பட்ட சேசுவே, உம்மைப் புகழ்ந்து ஸ்துதித்து, உமது திருத்தோளின் கடூர காயத்திற் காக உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்து கிறேன்.  நீர் அனுபவித்த இந்த மட்டற்ற வேதனை உமது சிலுவையின் பாரச் சுமையால் அதிகரித் ததின் மேல் நான் நொந்தழுது, பாவியாகிய என் பேரில் தேவரீர் இரக்கமாயிருக்கவும்,  என் பாவ அக்கிரமங்களைப் பொறுத்து உமது சிலுவையின் பாதை வழியாய் என்னை மோட்ச பாக்கியம் சேர்ப்பிக்கவும் தயைபுரிய வேணுமென்று உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஆமென்.

மதுர சேசுவே! உமது திருத்தோளின் கடூர காயத்தைப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஆமென்.