அர்ச். ஆரோக்கியநாதர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுக்கு இராக்கினியான அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் செய்யப் பட்ட பக்தியுள்ள வேண்டுதலால் உற்பவித்த அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரவிய சம்பன்னரான தாய் தகப்பனிடத் திலும் உயர்ந்த வம்சத்திலும் பிறந்த அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாயின் கர்ப்பத்தில்தானே உமது சரீரத்தில் அர்ச். சிலுவை பதியப்பட்டு பிறக்க வரம் பெற்றவ ரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறுவயதில்தானே புண்ணியத்தின் பேரிலே மிகுந்த பிரியத்தைக் காண்பித்துப் பன்னிரண் டாம் பிராயத்திலே உமது சரீரத்தைத் தவத் தினாலும் உபவாசத்தினாலும் ஒறுத்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அரிய தவத்தினாலும் செபத்தினாலும் ஆசாபாசத்தைக் கீழ்ப்படுத்தினவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது தாய் தகப்பன் இறந்தவுடனே சகல ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத் துத் தகப்பன் காணியாட்சிகளை உம்முடைய நன்மாமன் வசம் ஒப்புவித்து உலகத்தை வெறுத் துத் துறந்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜென்ம தேசத்தையும் சிநேகிதர்களையும் உறவினர்களையும் விட்டு அர்ச். பிரான்சீஸ்குவின் மூன்றாம் சபையில் உட்பட்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உரோமாபுரியில் அர்ச்சியசிஷ்ட ஸ்தலங்களைச் சந்திக்கத் தரித்திர வேஷம் கொண்டு இத்தாலி தேசத்திற்குப் போனவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தத் தேசத்திலேயும் மிகவும் பரவியிருந்த கொள்ளைநோயில் நின்று சிலுவையின் அடை யாளத்தால் திரளான சனங்களைக் குணமாக்கின  அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இத்தாலி தேசத்தைச் சேர்ந்த அநேக இராச்சியங் களிலே கொள்ளை நோயால் சாவுக்கு ஆயத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் தந்த அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரன் உம்மைக் கொண்டு செய்து வந்த நவமான அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஜனங்களால் மிகவும் துதிக்கப்பட்ட அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பின்னும் உமக்கு வந்த கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்களை எல்லாம் பொறுமை யோடு அனுபவித்து மகிமையான மோட்ச முடியை உறுதிப்படுத்திக் கொண்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆண்டவரால் அருளப்பட்ட அகோரமான காய்ச்சல் உமக்கு வந்தபோது உமது பெருந்தொடை யானது அம்பால் ஊடுருவப்பட்டாப்போல் கடும் இரணப்படப் பேறுபெற்ற அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்த நோக்காடுகளை மிகுந்த ஆச்சரியமான பொறுமையோடும் சந்தோ­த்தோடும் அனுப வித்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜென்ம தேசத்திற்கு வரும்போது வழியிலே மறுபடியும் வியாதியால் கஷ்டப்பட்டு சர்வேசுர னுடைய ஆதரவால் மனிதருடைய சகாயமின்றிக் காட்டிலே படுத்திருந்தவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தக் காட்டிலே வியாதியாயிருக்கும்போது சர்வேசுரன் தயவால் நாயைக் கொண்டு உமது சீவனத்திற்கு அப்பம் கொண்டுவர வரம்பெற்ற அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது ஜென்மப் பட்டணத்தில் நுழைந்தவுடன் வேவுகாரனைப் போல் பிடித்துச் சிறையில் அடைக்கப்பட்டவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தப் பட்டணத்துக்கு உம்முடைய மாமன் அதிபதியாயிருந்தாலும் உம்மை இன்னாரென்று காண்பிக்க மனதில்லாதவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய சுய பிரஜைகளால் சேசுநாதரைப் பற்றிச் சகல நிர்ப்பந்தங்களையும் அனுபவித்து மரணமடைய ஆசை கொண்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது சாவு நெருங்கினதென்றறிந்து மிகுந்த பக்தியோடே தேவதிரவிய அனுமானங்களைப் பெற்றுச் சாவுக்கு ஆயத்தம் செய்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் ஐந்து வருட காலமாய்ச் சிறையில் அடை பட்ட பிறகு கொள்ளை நோயால் இறக்க அஞ்சாத தைரியத்துடனே ஏக சர்வேசுரனை தியானித்த பிறகு அந்த வியாதியால் மரணமடைந் தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொள்ளை நோயில் உம்மை மன்றாடினவர் கள் தீமையின்றிக் காப்பாற்றப்படுவார்கள் என்று ஏக சர்வேசுரன் தமது சம்மனசைக் கொண்டு அறிவிக்க வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொள்ளைநோய் கொண்டவர்கள் உம்மை மன்றாடினால் ஆரோக்கியம் அடைவார்கள் என்று உமது சரீரத்தின் பக்கத்தில் ஒரு சிறு பலகையில் எழுதப்பட வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை வேவுகாரனுமாய்க் குற்றவாளியுமாய் எண்ணின உமது மாமன் உம்மை இன்னாரென்று அறிந்த மாத்திரத்தில் அவனால் மிகுந்த கஸ்தி வியாகுலத்துடனே  சந்திக்கப்பட்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது திருச்சரீரம் வெகு ஆடம்பரத்துடனேயும், வணக்கத்துடனேயும் அடுத்த கோவிலிலே அவனால் நல்லடக்கம் செய்யப்பட்ட அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொன்ஸ்தான்ஸ் என்கிற பட்டணத்தில் சாதாரண திருச்சங்கமாகக் கூடின மேற்றிராணி மார்கள் உமது அர்ச்சிஷ்டதனத்தை வெகு ஆடம்பரத்துடனே கொண்டாடினபோது அங்கே யிருந்த கொள்ளை நோய்களையயல்லாம் போக்கடித்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வெனீஸ் என்கிற பட்டணத்திலே விசேஷமாய் சரீரம் வெகு வணக்கம் பெற்றிருக்கவும், அதை சந்திக்கிறவர்களுக்கு அநேக நன்மைகளைச் செய்யவும் வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் பேரில் ஆண்டவர் கொண்டிருக்கும் தேவகோபாக்கினைகளான பஞ்சம், படை, கொள்ளை, வியாதி, பெருவாரி இவை முதலான வைகளில் நின்று எங்களை இரட்சிக்க எங்களுக் காக மன்றாடுகிறவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி!  கொள்ளைநோய், பஞ்சம், படை, பெருவாரிக் காய்ச்சல் இவை முதலான ஆபத்தில் துன்பப் படுகிற யாவரும் அர்ச். ஆரோக்கியநாதரை மன்றாடி வேண்டிக்கொண்டால் அவர்களுடைய பிணி தீர்ந்து குணப்படுவார்கள் என்று அவருடைய சரீரத்தின் பக்கத்தில் பதிந்ததுமன்றி, உம்முடைய சம்மனசானவரைக் கொண்டும் வார்த்தைப்பாடு கொடுத்தீரே.  அவருடைய திருநாளைக் கொண் டாடுகிறவர்களும் அவருடைய வேண்டுதலின் உதவியைக் கேட்கிறவர்களுமாகிய நாங்கள் அவருடைய உத்தம மன்றாட்டினாலே எங்க ளுடைய ஆத்தும சரீரத்தின் ஆபத்தான கொள்ளை நோயில் நின்று எங்களை மீட்டு இரட்சிக்கும் படிக்குத் தேவரீரை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சேசுகிறீஸ்துநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.