அர்ச். சூசையப்பர் நவநாள் - 8 ம் ஜெபம்

4-வது: தேவ நம்பிக்கை அடைய ஜெபம்

இம்மைக்கும் மறுமைக்கும் சர்வேசுரன் பேரில் திடமான நம்பிக்கையை வைத்திருந்த அர்ச். சூசையப்பரே! விசுவசிக்கிறவனுக்கு வெட்க மில்லை, நம்பிக்கையுள்ளவனுக்கு பயமில்லை என்பதை அறிந்திருந்தாலும், அநித்தியமான வஸ்துக்ளோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கெட்ட மாம்சத்தினிமித்தம் நித்திய காரியங்களின் பேரில் எனக்கு நம்பிக்கைக் குறைவதைக் கண்டு மிகவும் விசனப்படுகிறேன். சர்வேசுரனின் வாக்குத்தத்தம் பெரிதே! நான் பாசங்களால் இழுபட்டு புகை போல் மறையும் அநித்தியப் படைப்புகளின் பேரில் நம்பிக்கை வைத்ததால் துக்கங்களும், கவலைகளும் என் தலைக்கு மேல் போயின. மகாத் துமாக்கள் தங்கள் நம்பிக்கையால் பரலோகம் ஏறினாற்போல, நான் நம்பிக்கையில் திடன் கொண்டு, உறுதியான ஜெப தவங்களால் மோட்ச பதவி அடையச் செய்தருளும். எனக்கு உறுதியான விசுவாசமிருந்தால், சுவாமியானவர் இருப்பதையும் நித்திய பதவி கொடுப்பதையும் நம்பி உலகக் கவலைகளால் மயங்காமல், நான் பாராததும், தேவ வாக்கு சொல்வதுமான காரியங்களில் ஊன்றி, காற் றுக்கு அசையா மலைபோல் அமர்ந்து துன்பங்களில் திடன் கொண்டிருப்பேன் அல்லவோ? அப்படி நான் இராததைப் பற்றி மெத்த மனஸ்தாபப்படு கிறேன். தேவசுதன் மனிதனாய்ப் பிறந்து பாடு பட்டு மரித்து உயிர்த்து பரமண்டலத்தில் ஏறினதே என் நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிருக்க,  நான் இன்னும் நம்பிக்கையில் தத்தளிப்பதைக் குறித்து மனங்கலங்கி அழுகிறேன். இந்த இரட்சகரை மாத்திரம் அண்டி, நான் எனக்கும் உலகத்திற்கும் மரித்து, நம்பிக்கையில் உயிர் வாழ்ந்தாலல்லோ தாவிளை? தேவமாதா முதலான அர்ச்சியசிஷ்ட வர்களும், சம்மனசுக்களும் தாழ்ந்த இந்த உலகத் தில் உபத்திரவப்படும் மனிதர்களுக்காக வேண்டிக் கொள்வதை நான் அறிந்திருந்தும், இரவும் பகலும் ஓயாமல் அவர்களை நோக்கி அலறி அழுது இடை விடாமல் மன்றாடாததால் விசனப்படுகிறேன். வரப்போகிற நித்திய ஜீவியத்திற்கு நான் காத்திருப் பதால், அழிந்துபோகிற சரீரத்தின் பேரிலும் என்றென்றும் ஒழிந்துபோகும் பொருட்களின் பேரிலும் நான் நம்பிக்கை வைப்பதேன்? இன்பங் களிலும், துன்பங்களிலும் சர்வேசுரன் பேரில் ஒரே நம்பிக்கையாயிருந்த அர்ச். சூசையப்பரே, நீர் என் அழுகைக்கும் வேண்டுதலுக்கும் இரங்கி சர்வேசு ரனை மன்றாடினாலும், அவர் எனக்குத் திடமான நம்பிக்கையைத் தருவார் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கலக்கமில்லை. ஆகவே என் இருதயம் ஒன்றிலும் கலங்காமல் சர்வேசுரன் பேரில் மட்டும் நம்பிக்கை வைக்கச் செய்தருளும். என் நம்பிக்கைக்கு ஆதாரமான மோட்சத்தில் என் இருதயம் இடைவிடாமல் குடிகொண்டிருக்கச் செய்தருளும். துன்ப துரிதங் களில் கலங்காமல் தேவ வாக்கியங்கள் பேரில் என் ஆசையயல்லாம் வைத்து, நான் சர்வேசுரனை மாத்திரம் நாடி அவர் பேரில் மாத்திரம் நம்பிக்கை யாயிருக்க எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.