அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் சிரம் பணிதல்.

கட கட என சாத்தான் வெருண்டோட
மட மட என அவன் ஆணவம் நீங்க
பட பட என மாற்றான் பதைத்து ஓட
உடன் வந்து உதவுவாய் திடமிகு தூயா,
எந்த வினை வந்தாலும் உந்தனை மறவோம்
தந்தை அந்தோனி சிந்தை இரங்குவாய்
இந்த வேளை எந்தனுக்குதவி நீ
சந்தக இன்பம் தந்தருள் கூராய்
இருள் நீக்கும்! மருள் ஓட்டும்! அருள் தாரும்!
பொருள் தாரும்! பொறை தாரும்! குறை தீரும்!
ஞான மீயும் பரமொனமீயும் - நரதாபம் தீரும்!
மனத்துயர் நீக்கும் ஈனப்பிணி நீக்கும்
அருள் பொழி அண்ணலே! போற்றி! போற்றி!
கருணை முகிலே! போற்றி! போற்றி!
திருவடியரே! போற்றி ! போற்றி!
அன்னை மரி பக்தரே போற்றி! போற்றி!
நன்மறை போதா - போற்றி போற்றி!
துன்பத்தில் இன்பமே போற்றி! போற்றி!
வன் பேயஞ்சும் - போற்றி போற்றி! -
எத்திக்கிலும் எதுவரினும்
அத்தா அதனையறவே போக்கி
தத்தளிக்கும் சேயரைக் காத்து
பக்தா பல்வரம் ஈவாய்.
கோடி அற்புதா சிரம் பணிகின்றோம்.
தேடியோருக்கு அடைக்கலம் சிரம் பணிகின்றோம்.
வாடியோருக்கு உறுதுணையே சிரம் பணிகின்றோம்.
ஈடில்லா தூயவனே சிரம் பணிகின்றோம்.
பிணி துயர், ஏவல் தொல்லை ,
அணியாய் உருமிடர் பித்து மற்ற
குணங்கின் மாயை - யாவும் மாற்றி
அணுகுமெமை - அரவணைப்பாய் - அண்ணகரே!

ஆமென்.