பாவசங்கீர்த்தன மந்திரம்.

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடனேயும், எப்போதும் கன்னியாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயுடனேயும், பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மிக்கேலுடனேயும், ஸ்நாபகராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட அருளப்பருடனேயும் அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடனேயும், சின்னப்பருடனேயும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும், (எனக்குக் குருவாயிருக்கிற உம்முடனேயும்) பாவசங்கீர்த்தனம் பண்ணிக் கொள்கிறேன்.  

அதேதென்றால், என் சிந்தனையினாலேயும், வாக்கினாலேயும், கிரிகையினாலேயும், மகா பாவங்களைச் செய்தேனே.  என் பாவமே!  என் பாவமே!  என் பெரும் பாவமே!  ஆகையால் எப்போதும் கன்னிகையாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயையும் பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மிக்கேலையும் ஸ்நாபகராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட அருளப்பரையும் அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பரையும் சின்னப்பரையும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், (எனக்குக் குருவாயிருக்கிற உம்மையும்) நம்முடைய கர்த்தராகிய சர்வேசுரனிடத்திலே, எனக்காக வேண்டிக் கொள்ள வேணுமென்று மன்றாடுகிறேன்.

ஆமென்.